‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஏய் ஜவானி ஹாய் தீவானி படத்தின் வெற்றிக்கு பிறகு ரன்பீர் கபூர், தீபிகா படுகோனே இணைந்துள்ள படம் 'தமாசா'. இப்படத்தை இம்தியாஸ் அலி இயக்க, சஜித் நடியாத்வாலா தயாரிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டில் துவங்கியது. முதற்கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் துங்கியது. பனி பிரதேசமான சிம்லாவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. முற்றிலும் வித்தியாசமான ரொமாண்டிக் கதையாக தமாசா உருவாகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்தாண்டு கிறிஸ்மஸ் தினத்தில் படம் ரிலீஸாக இருக்கிறது. 2015 பாலிவுட் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களில் தமாசா படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.