மலர்விழி புரெடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக D.ரஞ்சித்குமார், A.M.தேவகுமாருடன் இணைந்து தயாரிக்கும் படம் “நாகர்கோவில் சந்திப்பு”. இந்த படத்தில் மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக ஜோதிகிருஷ்ணா நடிக்கிறார். மற்றும் சுகன்யா,ஷங்கிரின், ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - பிரகாஷ், இசை - ராஜ்பாஸ்கர், பாடல்கள் - நந்தலாலா, நடனம் - சத்யாசெல்வி, வசனம் - ஜான்பீட்டர், எழுதி இயக்குபவர் ஜி.ஜீ.அசோகன், நிர்வாக தயாரிப்பு - பி.ஏலுமலை, இனைதயரிப்பு - A.M.தேவகுமார், தயாரிப்பு - D.ரஞ்சித்குமார்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்... பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் படிக்காமல் எதிர்கால சிந்தனை இல்லாமல் இருகிறார்கள்...அவர்களை பார்த்து பரிதாபப் பட்ட ஆசிரியை சுகன்யா அவர்களை திருத்த அறிவுரை சொல்கிறார். அது பிடிக்காத மாணவர்கள் சுகன்யாவை மாடியிலிருந்து தள்ளி விடுகிறார்கள். அந்த குற்றத்திலிருந்து தப்பித்தார்களா? மாணவர்கள் வெற்றி பெற்றார்களா என்பது கதை! படத்தின் பெரும்பகுதி நாகர்கோவில் பகுதிகளில் நடைபெறுகிறது.