லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வீஜே தீபிகா. சமீபகாலங்களில் ஊடகங்களில் பேட்டி அளித்து வரும் அவர், மீடியாவுக்கு வந்த புதிதில் பட்ட கஷ்டங்களையும் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்ததையும் கூறி வருகிறார். அதேபோல் தனது கடன்கள் அனைத்தையும் தீர்த்து வைத்தது முகருப்பரு தான் என சுவாரசியமான தகவலை கூறியிருக்கிறார்.
அதாவது, விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த தீபிகாவிற்கு முகப்பருக்கள் அதிகம் இருந்ததால் சீரியலிலிருந்து வெளியேறினார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் தீபிகாவிற்கு சோஷியல் மீடியாவில் தங்களது தீவிரமான ஆதரவை கொடுத்தார்கள். இதனால் யு-டியூபில் தீபிகா வெளியிடும் வீடியோக்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதன் மூலம் கிடைத்த வருமானம் மூலம் தீபிகா தனது கடன்கள் அனைத்தையும் அடைத்துவிட்டாராம். கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல் சீரியலிலிருந்து வெளியேறிய தீபிகா ரசிகர்களிடம் அதிக புகழ் பெற்று இன்று அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறார்.