சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வீஜே தீபிகா. சமீபகாலங்களில் ஊடகங்களில் பேட்டி அளித்து வரும் அவர், மீடியாவுக்கு வந்த புதிதில் பட்ட கஷ்டங்களையும் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்ததையும் கூறி வருகிறார். அதேபோல் தனது கடன்கள் அனைத்தையும் தீர்த்து வைத்தது முகருப்பரு தான் என சுவாரசியமான தகவலை கூறியிருக்கிறார்.
அதாவது, விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த தீபிகாவிற்கு முகப்பருக்கள் அதிகம் இருந்ததால் சீரியலிலிருந்து வெளியேறினார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் தீபிகாவிற்கு சோஷியல் மீடியாவில் தங்களது தீவிரமான ஆதரவை கொடுத்தார்கள். இதனால் யு-டியூபில் தீபிகா வெளியிடும் வீடியோக்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதன் மூலம் கிடைத்த வருமானம் மூலம் தீபிகா தனது கடன்கள் அனைத்தையும் அடைத்துவிட்டாராம். கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல் சீரியலிலிருந்து வெளியேறிய தீபிகா ரசிகர்களிடம் அதிக புகழ் பெற்று இன்று அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறார்.