'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வீஜே தீபிகா. சமீபகாலங்களில் ஊடகங்களில் பேட்டி அளித்து வரும் அவர், மீடியாவுக்கு வந்த புதிதில் பட்ட கஷ்டங்களையும் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்ததையும் கூறி வருகிறார். அதேபோல் தனது கடன்கள் அனைத்தையும் தீர்த்து வைத்தது முகருப்பரு தான் என சுவாரசியமான தகவலை கூறியிருக்கிறார்.
அதாவது, விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த தீபிகாவிற்கு முகப்பருக்கள் அதிகம் இருந்ததால் சீரியலிலிருந்து வெளியேறினார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் தீபிகாவிற்கு சோஷியல் மீடியாவில் தங்களது தீவிரமான ஆதரவை கொடுத்தார்கள். இதனால் யு-டியூபில் தீபிகா வெளியிடும் வீடியோக்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதன் மூலம் கிடைத்த வருமானம் மூலம் தீபிகா தனது கடன்கள் அனைத்தையும் அடைத்துவிட்டாராம். கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல் சீரியலிலிருந்து வெளியேறிய தீபிகா ரசிகர்களிடம் அதிக புகழ் பெற்று இன்று அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறார்.




