நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
சினிமாவுக்கு முன் இமான் அண்ணாச்சி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நெல்லை-தூத்துக்குடி தமிழில் பேசி அசத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார் இமான் அண்ணாச்சி. இன்று வெள்ளித்திரையில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருகிறார். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் தனது சினிமா பயணம் குறித்து பேசியுள்ளார்.
அதில், 'நான் சின்ன வயசுலேயே சினிமாவுல காமெடியனா நடிக்க ஆசைப்பட்டேன். ஊர்ல எல்லோரும் நான் நல்லா சிரிக்க வைக்கிறதா சொல்லி சினிமாவுல நடிச்சா என்னன்னு கேட்டாங்க. உடனே மஞ்சப்பையை தூக்கிட்டு சென்னைக்கு வந்துட்டேன். முதல்ல ஒரு மளிகை கடைல வேலைக்கு சேர்ந்தேன். அங்க நான் சினிமாவுல நடிக்க தான் வந்திருக்கேன்னு தெரிஞ்சப்போ வேலைய விட்டு அனுப்பிட்டாங்க. அப்புறம் ஒரு கேமரா கடைல சேர்ந்தேன். அதுக்கப்புறம் காசுக்காக ரோட்டுல காய்கறி வியாபாரம் செஞ்சேன். அப்பதான் என்ன நம்பி பொண்ணையும் கொடுத்து கல்யாணம் பண்ணி வச்சாங்க. பொண்டாட்டி நகைய பணம் தேவைக்காக ஒன்னு ஒன்னா வித்துட்டேன். ஆனா இப்ப சினிமாவுல வாய்ப்பு கிடைச்சு சம்பாதிச்ச அப்புறம் நூறு பவுனா அவங்களுக்கு திருப்பி கொடுத்துட்டேன்' என்று தனது சினிமா பயணம் குறித்து இமான் அண்ணாச்சி கூறியுள்ளார்.