300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
சினிமாவுக்கு முன் இமான் அண்ணாச்சி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நெல்லை-தூத்துக்குடி தமிழில் பேசி அசத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார் இமான் அண்ணாச்சி. இன்று வெள்ளித்திரையில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருகிறார். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் தனது சினிமா பயணம் குறித்து பேசியுள்ளார்.
அதில், 'நான் சின்ன வயசுலேயே சினிமாவுல காமெடியனா நடிக்க ஆசைப்பட்டேன். ஊர்ல எல்லோரும் நான் நல்லா சிரிக்க வைக்கிறதா சொல்லி சினிமாவுல நடிச்சா என்னன்னு கேட்டாங்க. உடனே மஞ்சப்பையை தூக்கிட்டு சென்னைக்கு வந்துட்டேன். முதல்ல ஒரு மளிகை கடைல வேலைக்கு சேர்ந்தேன். அங்க நான் சினிமாவுல நடிக்க தான் வந்திருக்கேன்னு தெரிஞ்சப்போ வேலைய விட்டு அனுப்பிட்டாங்க. அப்புறம் ஒரு கேமரா கடைல சேர்ந்தேன். அதுக்கப்புறம் காசுக்காக ரோட்டுல காய்கறி வியாபாரம் செஞ்சேன். அப்பதான் என்ன நம்பி பொண்ணையும் கொடுத்து கல்யாணம் பண்ணி வச்சாங்க. பொண்டாட்டி நகைய பணம் தேவைக்காக ஒன்னு ஒன்னா வித்துட்டேன். ஆனா இப்ப சினிமாவுல வாய்ப்பு கிடைச்சு சம்பாதிச்ச அப்புறம் நூறு பவுனா அவங்களுக்கு திருப்பி கொடுத்துட்டேன்' என்று தனது சினிமா பயணம் குறித்து இமான் அண்ணாச்சி கூறியுள்ளார்.