நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு | 75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் |

சினிமாவுக்கு முன் இமான் அண்ணாச்சி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நெல்லை-தூத்துக்குடி தமிழில் பேசி அசத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார் இமான் அண்ணாச்சி. இன்று வெள்ளித்திரையில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருகிறார். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் தனது சினிமா பயணம் குறித்து பேசியுள்ளார்.
அதில், 'நான் சின்ன வயசுலேயே சினிமாவுல காமெடியனா நடிக்க ஆசைப்பட்டேன். ஊர்ல எல்லோரும் நான் நல்லா சிரிக்க வைக்கிறதா சொல்லி சினிமாவுல நடிச்சா என்னன்னு கேட்டாங்க. உடனே மஞ்சப்பையை தூக்கிட்டு சென்னைக்கு வந்துட்டேன். முதல்ல ஒரு மளிகை கடைல வேலைக்கு சேர்ந்தேன். அங்க நான் சினிமாவுல நடிக்க தான் வந்திருக்கேன்னு தெரிஞ்சப்போ வேலைய விட்டு அனுப்பிட்டாங்க. அப்புறம் ஒரு கேமரா கடைல சேர்ந்தேன். அதுக்கப்புறம் காசுக்காக ரோட்டுல காய்கறி வியாபாரம் செஞ்சேன். அப்பதான் என்ன நம்பி பொண்ணையும் கொடுத்து கல்யாணம் பண்ணி வச்சாங்க. பொண்டாட்டி நகைய பணம் தேவைக்காக ஒன்னு ஒன்னா வித்துட்டேன். ஆனா இப்ப சினிமாவுல வாய்ப்பு கிடைச்சு சம்பாதிச்ச அப்புறம் நூறு பவுனா அவங்களுக்கு திருப்பி கொடுத்துட்டேன்' என்று தனது சினிமா பயணம் குறித்து இமான் அண்ணாச்சி கூறியுள்ளார்.