ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ்த் திரையுலகத்தில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவர் கவுதம் மேனன். இப்போதைய இயக்குனர்களில் காதல் படங்களின் ஸ்பெஷல் இயக்குனர் என தாராளமாகக் குறிப்பிடலாம். இளம் தலைமுறை இயக்குனர்கள் சிலர் புதிதாக வந்தாலும் இருபது வருடங்களாக இன்றைய தலைமுறை ரசிகர்கள் ரசிக்கும் விதத்திலும் காதலைச் சொல்லி வருபவர்.
'காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா' படங்கள் பல காதல் படங்களுக்கு இன்ஸ்பிரேஷன் என்றால் அது மிகையில்லை. இப்படி சில பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான கௌதம் மேனன் கடந்த சில வருடங்களாக தடங்கல்களால் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.
'என்னை அறிந்தால்' படத்திற்குப் பிறகு அவரது இயக்கத்தில் வந்த 'அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்கள் படப்பிடிப்பு ஆரம்பமாகி சில வருடங்கள் இ......ழுத்து, பிறகே வெளிவந்தன.
தற்போது அவரது இயக்கத்தில் 'ஜோஷ்வா இமை போல் காக்க, துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களும் முடிந்தும், முடியாமலும் திரையைப் பார்க்காமல் தவித்து வருகின்றன. அதற்குத் தீர்வு காணாமல் அடுத்ததாக சிம்பு கதாநாயகனாக நடிக்க 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தை ஆரம்பிக்கத் தயாராக இருந்தார்.
சொல்லி வைத்தாற் போல அந்தப் படம் ஆரம்பமாவதற்கு முன்பே சிக்கலை சந்திக்கத் தயாராகிவிட்டது. சிம்பு சம்பந்தப்பட்ட 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பட பிரச்சினையால் கவுதம் மேனன், சிம்பு மீண்டும் இணையும் 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தைத் திட்டமிட்டபடி ஆரம்பிக்க முடியவில்லை.
ஏற்கெனவே, இரண்டு படங்கள் சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கும் போது, புதிய படமும் இப்படி சிக்கலை நோக்கி இருக்கிறதே என திரையுலகத்தில் உள்ள சிலர் இப்போது அனுதாபப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.