தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையில் தியேட்டர்கள் திறப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடுவது தற்போதுதான் சூடு பிடித்து வருகிறது. 'ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை' என இரண்டு பெரிய படங்கள் வெளியான நிலையில் அடுத்தடுத்து மேலும் சில புதிய படங்கள் வாரம்தோறும் வெளியாக உள்ளது.
ஓடிடி தளங்களுக்குப் போட்டியாக டிவிக்களிலும் நேரடியாக படத்தை வெளியீடு செய்வதும் பரபரப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் டிவியில் நேரடியாக வெளியான சில சிறிய படங்களுக்கு சுமாரான வரவேற்பு கிடைத்துள்ளது. அதையே பெரிய படங்கள் என மாற்றி பெரிய வரவேற்பை பெற சில டிவி நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
அதில் தற்போது ஒரு முன்னணி டிவி, விஜய் சேதுபதி நடித்துள்ள 'துக்ளக் தர்பார்,', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்', த்ரிஷா நடித்துள்ள 'ராங்கி' உள்ளிட்ட சில படங்களை நேரடியாக டிவியில் வெளியிட பேசி வருகிறதாம். அப்படி கிடைக்காத சில படங்கள், வேறு ஓடிடி நிறுவனங்கள் வாங்கிய படங்களை உடனடியாக டிவியில் ஒளிபரப்பவும் பேசி வருகிறார்களாம்.
வினாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி என வர உள்ள பண்டிகை நாட்களில் இப்படி டிவியில் நேரடியாக முதல் முறை என சொல்லுமளவிற்கு சில பெரிய படங்கள் இடம் பெறும் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
தியேட்டர்கள் திறக்கப்பட்டால், சில படங்கள் நம்மைக் காப்பாற்றும் என தியேட்டர்காரர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் படங்கள், இப்படி ஓடிடி, நேரடி டிவி என போவதைக் கண்டு தியேட்டர்காரர்கள் திகைத்துப் போயிருப்பதாகவும் தகவல்.