பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
கேரளாவை சேர்ந்த பிரஜன் தமிழ் தொடர்களில் நடித்து புகழ் பெற்றார். பெண், அஞ்சலி, இது ஒரு காதல் கதை, காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, சின்னதம்பி, அன்புடன் குஷி உள்பட பல தொடர்களில் நடித்தார்.
ஆனாலும் பிரஜனுக்கு சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பது தான் கனவு. இடையிடையில் சில படங்களில் நடித்தாலும் சினிமாவில் அவர் நினைத்த இடத்தை பிடிக்க முடியவில்லை. பழைய வண்ணாரப்பேட்டை, மணல் நகரம் அவர் நடித்த படங்களில் முக்கியமானது. கடைசியாக மலையாளத்தில் வெளிவந்த லவ் ஆக்ஷன் டிராமா படத்தில் நடித்திருந்தார்.
இப்போது தமிழில் மீண்டும் ஹீரோவாகிறார். சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராஜன் இயக்கும் நினைவெல்லாம் நீயடா படத்தில் பிரஜன் தான் ஹீரோ. அவருடன் மதுமிதா, காளி வெங்கட், மயில்சாமி, கேப்ரில்லா, சினாமிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது.
"இது ஒரு காதல் கதை. இளையராஜாவின் இசையால் அந்த காதல் வழியப்போகிறது. சென்னை, புதுச்சேரி, மதுரை, கூர்க் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது" என்கிறார் இயக்குனர் ஆதிராஜன்.