எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சென்னை : 'ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு தர வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை தியேட்டர் திறப்புக்கு முன் நடைமுறைப்படுத்த வேண்டும்' என தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், தியேட்டர் உரிமையாளர்களுக்கு கெடு விதித்துள்ளனர்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாக்குழு கூட்டம் தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது. இதில் சில மு்க்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கை: தியேட்டர்கள் அனைத்திலும் டிக்கெட் வழங்கும் முறை கணினிமயமாக்க வேண்டும். வெளிப்படைத் தன்மையை தயாரிப்பாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தியேட்டரில் திரையிடப்படும் படங்களில் உரிமை முழுவதும் தயாரிப்பாளர்களுக்கே சொந்தம். தியேட்டர் உரிமையாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. தயாரிப்பாளர்களின் அனுமதி பெற்ற பின்னரே ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும். ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் வரும் வருமானம் தியேட்டர் உரிமையாளர்கள், புக்கிங் ஏஜென்ட் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பிரித்து தர வேண்டும். அதேபோல் விளம்பரத்திலும் பங்கு வேண்டும்.
ஜி.எஸ்.டி வரி செலுத்துவதில் உள்ள குளறுபடிகளை தீர்க்க, தியேட்டர் பெயரிலேயே இனி வரி கட்ட வேண்டும். மேலும் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனையை தீர்க்க, சிண்டிகேட் அமைத்து செயல்படும் முறையை தியேட்டர் உரிமையாளர்கள் கலைக்க வேண்டும்.
சின்ன பட்ஜெட் படங்கள் தியேட்டரில் வெளியாகும் போது, மூன்று வகையான டிக்கெட்களை விற்க வேண்டும். படங்களை வெளியிடும் போது, வி.பி.எப்., கட்டணத்தை தயாரிப்பாளர்கள் செலுத்துவதில்லை என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முடிவுகளை தியேட்டர் திறப்புக்கு முன் நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால், அரசிடம் முறையிட்டு தீர்வு காண வழி செய்யப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.