மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சென்னை : 'ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு தர வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை தியேட்டர் திறப்புக்கு முன் நடைமுறைப்படுத்த வேண்டும்' என தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், தியேட்டர் உரிமையாளர்களுக்கு கெடு விதித்துள்ளனர்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாக்குழு கூட்டம் தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது. இதில் சில மு்க்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கை: தியேட்டர்கள் அனைத்திலும் டிக்கெட் வழங்கும் முறை கணினிமயமாக்க வேண்டும். வெளிப்படைத் தன்மையை தயாரிப்பாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தியேட்டரில் திரையிடப்படும் படங்களில் உரிமை முழுவதும் தயாரிப்பாளர்களுக்கே சொந்தம். தியேட்டர் உரிமையாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. தயாரிப்பாளர்களின் அனுமதி பெற்ற பின்னரே ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும். ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் வரும் வருமானம் தியேட்டர் உரிமையாளர்கள், புக்கிங் ஏஜென்ட் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பிரித்து தர வேண்டும். அதேபோல் விளம்பரத்திலும் பங்கு வேண்டும்.
ஜி.எஸ்.டி வரி செலுத்துவதில் உள்ள குளறுபடிகளை தீர்க்க, தியேட்டர் பெயரிலேயே இனி வரி கட்ட வேண்டும். மேலும் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனையை தீர்க்க, சிண்டிகேட் அமைத்து செயல்படும் முறையை தியேட்டர் உரிமையாளர்கள் கலைக்க வேண்டும்.
சின்ன பட்ஜெட் படங்கள் தியேட்டரில் வெளியாகும் போது, மூன்று வகையான டிக்கெட்களை விற்க வேண்டும். படங்களை வெளியிடும் போது, வி.பி.எப்., கட்டணத்தை தயாரிப்பாளர்கள் செலுத்துவதில்லை என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முடிவுகளை தியேட்டர் திறப்புக்கு முன் நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால், அரசிடம் முறையிட்டு தீர்வு காண வழி செய்யப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.