கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியாகி 25வது நாளை தொட்டு விட்டது. இந்தப்படம் ரிலீசான சமயத்திலேயே கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடியதாக இருந்தது. அதனால் அதற்கு மேல் சேர்க்க முடியாததென படத்தின் முக்கியமான சில காட்சிகளை நீக்கிவிட்டார்கள். அப்படி நீக்கப்பட்ட காட்சி ஒன்றை நேற்று வெளியிட்டது அமேசான் பிரைம் நிறுவனம்.
அதில் சக மாணவர்கள் இருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார் மாணவி கவுரி கிஷன். இந்தவிஷயத்தில் பேராசிரியரான விஜய் அதிரடியாக இறங்கி சம்பந்தப்பட்ட மாணவர்களை அடித்து உதைத்து, கவுரி கிஷனுக்கு நீதி பெற்று தருவது போல காட்சி இருந்தது. மேலும் பெண்கள் அணியும் உடைகளை வைத்து அவர்களது கேரக்டரை தீர்மானிக்க கூடது என்கிற வசனமும் இடம்பெற்றிருந்தது. இதற்கு விஜய் ரசிகர்களிடமும் சோஷியல் மீடியாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தநிலையில் பின்னணி பாடகி சின்மயி இந்த காட்சியை குறிப்பிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜை பாராட்டியுள்ளார். அதேசமயம் மீ டூவில் தான் குற்றம் சாட்டிய வைரமுத்து, ராதாரவி போன்றவர்களையும் மீண்டும் இந்த விஷயத்தில் இணைத்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், :இதுபோன்ற காட்சியை இயக்குனர் எழுதியற்காக பெருமைப்படுகிறேன்.. பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டவரையே, நீண்ட நாளைக்கு குற்றம் சாட்டுவது, என்றாவது ஒருநாள் முடிவுக்கு வரும். அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.. அதுமட்டுமல்ல இந்த உலகில் உள்ள வைரமுத்துக்கள், ராதாரவிகள் ஆகியோரை பற்றி பேசிக் கொண்டு தான் இருக்க வேண்டும்” என கூறியுள்ளார் சின்மயி.