ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
சென்னை, வடபழனி, பிரசாத் ஸ்டூடியோவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன் இசைப்பணிகளை செய்து வந்தார் இசைஞானி இளையராஜா. அந்த இடத்திலிருந்து ஸ்டுடியோ நிர்வாகம், அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. இதுதொடர்பாக கோர்ட் வரை பிரச்னைகள் நடந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் அவ்விடத்தில் இருந்து நீங்கிய நிலையில், தற்போது கோடம்பாக்கம் பழைய எம்.எம்.தியேட்டரில் புது ஸ்டூடியோவை இளையராஜா உருவாக்கி உள்ளார். இதன் திறப்பு விழா இன்று(பிப்., 3) நடக்கிறது. வெற்றிமாறன், இளையராஜா முதல் முறையாக இணையும் புதுப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்கிறார். இப்படத்திற்கான பாடல் ஒலிப்பதிவு இளையராஜாவின் புது ஸ்டூடியோவில் நடக்க உள்ளது. இப்படத்தில் விஜய்சேதுபதி, ஜி.வி.பிரகாஷ்குமார் தங்கை பவானிஸ்ரீ முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு சத்தியமங்கலத்தில் நடந்து வருகிறது.