23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
சென்னை, வடபழனி, பிரசாத் ஸ்டூடியோவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன் இசைப்பணிகளை செய்து வந்தார் இசைஞானி இளையராஜா. அந்த இடத்திலிருந்து ஸ்டுடியோ நிர்வாகம், அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. இதுதொடர்பாக கோர்ட் வரை பிரச்னைகள் நடந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் அவ்விடத்தில் இருந்து நீங்கிய நிலையில், தற்போது கோடம்பாக்கம் பழைய எம்.எம்.தியேட்டரில் புது ஸ்டூடியோவை இளையராஜா உருவாக்கி உள்ளார். இதன் திறப்பு விழா இன்று(பிப்., 3) நடக்கிறது. வெற்றிமாறன், இளையராஜா முதல் முறையாக இணையும் புதுப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்கிறார். இப்படத்திற்கான பாடல் ஒலிப்பதிவு இளையராஜாவின் புது ஸ்டூடியோவில் நடக்க உள்ளது. இப்படத்தில் விஜய்சேதுபதி, ஜி.வி.பிரகாஷ்குமார் தங்கை பவானிஸ்ரீ முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு சத்தியமங்கலத்தில் நடந்து வருகிறது.