நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சென்னை, வடபழனி, பிரசாத் ஸ்டூடியோவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன் இசைப்பணிகளை செய்து வந்தார் இசைஞானி இளையராஜா. அந்த இடத்திலிருந்து ஸ்டுடியோ நிர்வாகம், அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. இதுதொடர்பாக கோர்ட் வரை பிரச்னைகள் நடந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் அவ்விடத்தில் இருந்து நீங்கிய நிலையில், தற்போது கோடம்பாக்கம் பழைய எம்.எம்.தியேட்டரில் புது ஸ்டூடியோவை இளையராஜா உருவாக்கி உள்ளார். இதன் திறப்பு விழா இன்று(பிப்., 3) நடக்கிறது. வெற்றிமாறன், இளையராஜா முதல் முறையாக இணையும் புதுப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்கிறார். இப்படத்திற்கான பாடல் ஒலிப்பதிவு இளையராஜாவின் புது ஸ்டூடியோவில் நடக்க உள்ளது. இப்படத்தில் விஜய்சேதுபதி, ஜி.வி.பிரகாஷ்குமார் தங்கை பவானிஸ்ரீ முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு சத்தியமங்கலத்தில் நடந்து வருகிறது.