ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

திரு இயக்கத்தில் கௌதம் கார்த்திக், கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கார்த்திக், அவரது மகன் கௌதம் கார்த்தி இருவரும் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் பொங்கலன்னு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்திற்காக ஒரு பாக்சிங் சண்டைக் காட்சி நேற்று படமாக்கப்பட்டது. அதன் படப்பிடிப்பு சுமார் 18 மணி நேரம் நடைபெற்றிருக்கிறது. நாயகன் கௌதம் கார்த்திக் துளியும் சோர்வு இல்லாமல் அந்தக் காட்சியில் நடித்தார் என படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் தெரிவித்துள்ளார்கள்.
பாக்சிங்கில் கௌதம் கார்த்திக் ஏற்கெனவே பயிற்சி பெற்றவர் என்பதால் அந்தக் காட்சியை எளிதாக எடுக்க முடிந்தது என்றும் படத்தின் வெளியீட்டுத் தேதியை நாளை அறிவிக்க உள்ளதாகவும் படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
கௌதம் கார்த்திக்கின் அப்பா கார்த்திக் நாயகனாக நடிக்கும் காலத்தில் படப்பிடிப்புக்கு சரியாகவே வர மாட்டார் என்று அவர் மீது பெரும் குற்றச்சாட்டு இருந்ததுண்டு. ஆனால், அவர் மகன் கௌதம் கார்த்திக்கோ, இப்போது சின்சியராக நடித்துக் கொடுத்துள்ளார் என்று பாராட்டைப் பெற்றுள்ளார்.