துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! |

1954 ம் ஆண்டு வெளியான படம் 'பெண்'. எம்.வி.ராமன் இயக்கிய இந்த படத்தில் வைஜயந்திமாலா, ஜெமினி கணேசன், அஞ்சலிதேவி, சுந்தரம் பாலச்சந்தர், சித்தூர் வி நாகையா, வி.கே. ராமசாமி, கே.என்.கமலம், கே.ஆர்.செல்லம் மற்றும் கே.சங்கரபாணி ஆகியோர் நடித்தனர். ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. ஆர்.சுதர்சனம் இசை அமைத்திருந்தார்.
இத்திரைப்படத்தின் கதை வைஜெயந்தி மாலா, அஞ்சலி தேவி இரண்டு ஹீரோயின்களை பற்றியது. வைஜயந்தி மாலா துணிச்சலான பெண், தவறு செய்தால் ஆண்களை கூட சவுக்கால் அடிப்பவர். அதே நேரத்தில் பெரிய நடன கலைஞர், அஞ்சலி தேவி அமைதியானவர். அவரின் வாழ்க்கையில் வரும் ஒரு பெரிய பிரச்னையை வைஜயந்திமாலா எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் கதை.
பெண்ணிய படங்களுக்கு முன்னோடி இந்த படம் என்று கூறலாம். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் ஹிந்தி மொழியில் 'லட்கி' எனவும் தெலுங்கு மொழியில் 'சங்கம்' எனவும் தயாரிக்கப்பட்டது. மூன்று மொழிகளிலுமே வைஜயந்திமாலா முன்னணி வேடத்தில் நடித்தார். மற்ற கேரக்டர்களில் அந்தந்த மொழி நடிகர்கள் நடித்தார்கள். இதற்கு முன் பானுமதி இதுபோன்று ஒரே படத்தில் 3 மொழிகளில் நாயகியாக நடித்திருந்தார்.