தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தெலுங்கின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் கடந்தாண்டு நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று பின் துணை முதல்வராகவும் பொறுப்பில் உள்ளார். தேர்தலுக்கு முன்னதாகவே அவர் நடிப்பில் 'ஹரிஹர வீர மல்லு, ஓஜி, உஸ்தாத் பகத்சிங்' ஆகிய படங்கள் படப்பிடிப்பில் இருந்தன.
துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு சில மாதங்களாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் தயாரிப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு 'ஹரிஹர வீர மல்லு', 'ஓஜி' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் ஹரிஹர வீர மல்லு படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
சில வாரங்களாக 'உஸ்தாத் பகத்சிங்' இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கதாநாயகிகளாக ஸ்ரீலீலா , ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை கிளைமாக்ஸ் காட்சியுடன் பவன் கல்யாண் அவரின் பிஸியான நேரத்திலும் நடித்து தந்து இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.