சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
2006ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' தொடரின் மூலம் பிரபலமானவர் ஸ்ரீ. அதன் பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கிய 'வழக்கு எண் 18/9' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் நின்று விடவே அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக அடையாளமே தெரியாதபடி இருக்கிறார்.
இணையத்தில் வெளியான இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர் கடைசியாக நடித்த ‛இறுகப்பற்று' படத்தில் சம்பளம் உள்ளிட்ட பிரச்னை காரணமாக அவர் மனஅழுத்தம் ஆனதாகவும், அதனால் இப்படி ஆகிவிட்டதாகவும் சிலர் அவதூறு பரப்பினர். இந்நிலையில், 'இறுகப்பற்று' படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகர் ஸ்ரீயின் உடல் நலம் குறித்து நாங்கள் உண்மையில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உட்பட நாங்களும் அவரை தொடர்பு கொள்ள நீண்ட நாட்களாக முயற்சித்து வருகிறோம்.
அதைச்சுற்றி நிறைய ஊகங்கள் வெளியாவது துரதிர்ஷ்டவசமானது. நடிகர் ஸ்ரீயை தொடர்புகொண்டு, அவரை நல்ல உடல்நலத்துடன் மீட்டு கொண்டுவருவது தான் எங்களின் முதன்மையான நோக்கம். அதற்கு யாரேனும் உதவிகரமாக இருந்தால் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.