கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு |
கன்னடத்தில் இருந்து வந்து இங்கு சாதனை படைத்தவர் சரோஜாதேவி. கன்னடத்து பைங்கிளி என்று அவரை தமிழ் ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால் அவருக்கு முன்பே கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்து சாதித்தவர் கன்னடத்து பசுங்கிளி எம்.வி.ராஜம்மா.
சரோஜா தேவி முதல் இன்றைய ராஷ்மிகா மந்தனா வரை கன்னட சினிமா, தமிழ் சினிமாவுக்குக் கதாநாயகிகளை வாரி வழங்கி வந்திருக்கிறது. அவர்களில் எத்தனையோ பேர் இங்கே புகழையும் பொருளையும் ஈட்டியிருந்தாலும், முதன் முதலில் கணக்கைத் தொடங்கியவர் எம்.வி.ராஜம்மா.
'யயாதி' என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 1940ல் வெளியான 'உத்தமபுத்திரன்' படத்தில் பி.யு.சின்னப்பா ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். கன்னடத்தை விட தமிழிலேயே அதிகமான படங்களில் நடித்துள்ளார். 1943ம் ஆண்டு 'ராதா ரமணா' என்ற கன்னட படத்தை தயாரித்தார். இதன் மூலம் தென்னிந்திய சினிமாவின் முதல் பெண் தயாரிப்பாளர் ஆனார். பிற்காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்தார். 1999ம் ஆண்டு காலமானார்.
இன்று அவரது 104வது பிறந்த நாள்.