நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

கன்னடத்தில் இருந்து வந்து இங்கு சாதனை படைத்தவர் சரோஜாதேவி. கன்னடத்து பைங்கிளி என்று அவரை தமிழ் ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால் அவருக்கு முன்பே கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்து சாதித்தவர் கன்னடத்து பசுங்கிளி எம்.வி.ராஜம்மா.
சரோஜா தேவி முதல் இன்றைய ராஷ்மிகா மந்தனா வரை கன்னட சினிமா, தமிழ் சினிமாவுக்குக் கதாநாயகிகளை வாரி வழங்கி வந்திருக்கிறது. அவர்களில் எத்தனையோ பேர் இங்கே புகழையும் பொருளையும் ஈட்டியிருந்தாலும், முதன் முதலில் கணக்கைத் தொடங்கியவர் எம்.வி.ராஜம்மா.
'யயாதி' என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 1940ல் வெளியான 'உத்தமபுத்திரன்' படத்தில் பி.யு.சின்னப்பா ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். கன்னடத்தை விட தமிழிலேயே அதிகமான படங்களில் நடித்துள்ளார். 1943ம் ஆண்டு 'ராதா ரமணா' என்ற கன்னட படத்தை தயாரித்தார். இதன் மூலம் தென்னிந்திய சினிமாவின் முதல் பெண் தயாரிப்பாளர் ஆனார். பிற்காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்தார். 1999ம் ஆண்டு காலமானார்.
இன்று அவரது 104வது பிறந்த நாள்.




