'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
கன்னடத்தில் இருந்து வந்து இங்கு சாதனை படைத்தவர் சரோஜாதேவி. கன்னடத்து பைங்கிளி என்று அவரை தமிழ் ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால் அவருக்கு முன்பே கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்து சாதித்தவர் கன்னடத்து பசுங்கிளி எம்.வி.ராஜம்மா.
சரோஜா தேவி முதல் இன்றைய ராஷ்மிகா மந்தனா வரை கன்னட சினிமா, தமிழ் சினிமாவுக்குக் கதாநாயகிகளை வாரி வழங்கி வந்திருக்கிறது. அவர்களில் எத்தனையோ பேர் இங்கே புகழையும் பொருளையும் ஈட்டியிருந்தாலும், முதன் முதலில் கணக்கைத் தொடங்கியவர் எம்.வி.ராஜம்மா.
'யயாதி' என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 1940ல் வெளியான 'உத்தமபுத்திரன்' படத்தில் பி.யு.சின்னப்பா ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். கன்னடத்தை விட தமிழிலேயே அதிகமான படங்களில் நடித்துள்ளார். 1943ம் ஆண்டு 'ராதா ரமணா' என்ற கன்னட படத்தை தயாரித்தார். இதன் மூலம் தென்னிந்திய சினிமாவின் முதல் பெண் தயாரிப்பாளர் ஆனார். பிற்காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்தார். 1999ம் ஆண்டு காலமானார்.
இன்று அவரது 104வது பிறந்த நாள்.