நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது | தயாரிப்பாளர் மகன் அறிமுகமாகும் படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு | நீதிமன்றத்தில் பிரபல நடிகை ரகசிய வாக்குமூலம் ; வெளிநாட்டுக்கு தப்பிய இயக்குனருக்கு லுக் அவுட் நோட்டீஸ் | புஷ்பா-2வுக்காக வழிவிட்டு ஒதுங்கிய பாலிவுட் படக்குழுவுக்கு அல்லு அர்ஜுன் நன்றி | பிளாஷ்பேக் : வெள்ளி விழா பட வாய்ப்பை இழந்த சுரேஷ் | பிளாஷ்பேக் : முதல் படத்திலிருந்து நீக்கப்பட்ட கிருஷ்ணன் - பஞ்சு | விலங்கு பறவைளுடன் போட்டோ ஷூட் நடத்திய ஆராத்யா |
இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் தனி இசை அமைப்பாளராக அறிமுகமானபோது தனது அண்ணனின் இசை குறிப்புகளிலேயே இசை அமைத்தார். பின்னர் அவர் தன்னிச்சையாக இசை அமைத்தபோதும் அது இளையராஜாவின் பாடல்கள் என்றே ரசிகர்கள் நம்பினார்கள். பல படங்களுக்கு அவர் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தபோதும் அது இளையராஜா பாடல் என்றே நம்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வந்த படம்தான் 'வாழ்வே மாயம்'. தெலுங்கில் 'பிரேமாபிஷேகம்' என்ற பெயரில் வெளிவந்து ஹிட்டான படத்தை கே.பாலாஜி தமிழில் 'வாழ்வே மாயம்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். தெலுங்கில் தாசரி நாராயணராவ் இயக்கியிருந்தார். தமிழில் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கினார். அக்னினேனி நாகேஸ்வரராவ் நடித்த கேரக்டரில் கமல் நடித்தார்.
'பிரேமாபிஷகம்' படத்திற்கு சக்ரவர்த்தி இசை அமைத்திருந்தார். தெலுங்கில் பாடல்கள் ஹிட்டானாலும். காலத்தை வென்ற சூப்பர் ஹிட் பாடல்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் 'வாழ்வே மாயம்' படத்திற்கு கங்கை அமரன் இசை அமைத்த பாடல்கள் காலத்தை வென்ற சூப்பர் ஹிட் பாடல் ஆனது. காட்சியின் சூழலுக்கு ஏற்ப சக்ரவர்த்தி போட்டிருந்த மெட்டை தழுவி அதில் மாற்றங்களை செய்து பாடல்களுக்கு புதிய இசையை கொடுத்திருந்தார் கங்கை அமரன்.
'தேவி ஸ்ரீதேவி, ஏ ராஜாவே, நீலவான ஓடையில், மழைக்கால மேகம், வந்தனம், வாழ்வே மாயம்...' என்று அத்தனை பாடல்களும் இன்றைக்கும் கேட்கும்போது மெய்மறக்க வைக்கும் பாடல்களாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசையும் பாடல்களும் பார்த்து, இளையராஜாதான் இசை என்று பல காலம் பந்தயம் கட்டியவர்களெல்லாம் உண்டு. ஒரு பொது நிகழ்ச்சியில் வாழ்வே மாயம் பாடல்கள் என்னுடையதல்ல, தம்பியுடையது என்று இளையராஜா சொன்ன பிறகே இந்த சந்தேகம் முடிவுக்கு வந்தது.