சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
நடிகர் தனுஷிற்கும், ரஜினியின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யாவுக்கும் 2004ல் திருமணம் ஆனது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். 20 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்தனர். சட்டபூர்வமான விவாகரத்து கோரி பரஸ்பரம் ஒப்புதலோடு நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தற்போது முதன்மை குடும்ப நல கோர்ட்டில் நடந்து வருகிறது. விசாரணையும் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இருவரும் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால் இருமுறை வழக்கு வந்தபோதும் இவர்கள் ஆஜராகவில்லை. இதனால் இவர்கள் சேர்ந்து வாழ பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தனுஷ், ஐஸ்வர்யா இன்று(நவ., 21) ஆஜராகினர். இருவரும் சேர்ந்த வாழ விருப்பம் இன்றி பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதாக தெரிகிறது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற நவ., 27ல் அறிவிப்பதாக நீதிமன்றம் அறிவித்து வழக்கை அன்றைய தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.