ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! | தனுஷ் படம் நின்றது ஏன்? இயக்குனர் ராம்குமார் விளக்கம் | மூன்றாம் பாலினத்தவர்கள் கடவுளின் குழந்தைகள்: ஆசிம் கெதர்பால் | வாரிசு நட்சத்திரங்களால் பல வாய்ப்புகளை இழந்தேன் ; கிர்த்தி சனோன் வேதனை | 'திரிஷ்யம் 2'வில் இடம்பெறாத கலாபவன் சாஜன் 'திரிஷ்யம் 3'ல் ரீ என்ட்ரி | நான் செட்டாகவில்லை ; அமீர்கானிடம் ஓப்பனாக கூறிய சாய் பல்லவி |

தொடர்ந்து பல பிரபலங்களின் விவகாரத்து அதிகரித்து வருவதைப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது ஆஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு, நேற்றிரவு திடீரென அறிவித்து அதிர்ச்சியடைய வைத்தார். அடுத்த சில மணிநேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும் இருவரும் பிரிவதாக சமூக வலைதளத்தில் அறிவித்தார்.
ரஹ்மான் வெளியிட்ட பதிவில், ''திருமண வாழ்வில் 30 ஆண்டுகளை தொட்டுவிடுவோம் என நம்பினோம். ஆனால் எதிர்பாராமல் இப்படி ஒரு முடிவு வந்துவிட்டது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தால் நடுங்கக்கூடும். உடைந்த துண்டுகள் மீண்டும் சேரவில்லை என்றாலும் நாங்கள் அதன் அர்த்தத்தை தேடுகிறோம். இதை நாங்கள் கடந்த செல்ல எங்களின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மரியாதை தரும் நண்பர்களின் அன்புக்கு நன்றி'' எனப் பதிவிட்டுள்ளார்.
அதிலும், அவருடைய பதிவின் முடிவில் #arrsairaabreakup என்ற ஹேஸ்டேக் உடன் முடித்திருந்தார். திரை பிரபலங்களின் விவாகரத்து பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து விட்டதாக ரசிகர்கள் கவலைப்பட்ட நேரத்தில், அந்த பிரிவு செய்தியிலும் ஹேஸ்டேக் பயன்படுத்தி இருப்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
'ஏ.ஆர். ரஹ்மான் தனது பிரிவினை அறிவிப்பதற்காக ஹேஷ்டேக்கை உருவாக்கிய ஆண்டாக 2024 வரலாற்றில் இடம்பிடிக்கும்' என ஒரு பயனர் கிண்டலடிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார். ஒரு சிலர், அவருடைய எக்ஸ் தளத்தை நிர்வகிப்பவர் இந்த பதிவை போட்டாரோ எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.