வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

தொடர்ந்து பல பிரபலங்களின் விவகாரத்து அதிகரித்து வருவதைப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது ஆஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு, நேற்றிரவு திடீரென அறிவித்து அதிர்ச்சியடைய வைத்தார். அடுத்த சில மணிநேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும் இருவரும் பிரிவதாக சமூக வலைதளத்தில் அறிவித்தார்.
ரஹ்மான் வெளியிட்ட பதிவில், ''திருமண வாழ்வில் 30 ஆண்டுகளை தொட்டுவிடுவோம் என நம்பினோம். ஆனால் எதிர்பாராமல் இப்படி ஒரு முடிவு வந்துவிட்டது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தால் நடுங்கக்கூடும். உடைந்த துண்டுகள் மீண்டும் சேரவில்லை என்றாலும் நாங்கள் அதன் அர்த்தத்தை தேடுகிறோம். இதை நாங்கள் கடந்த செல்ல எங்களின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மரியாதை தரும் நண்பர்களின் அன்புக்கு நன்றி'' எனப் பதிவிட்டுள்ளார்.
அதிலும், அவருடைய பதிவின் முடிவில் #arrsairaabreakup என்ற ஹேஸ்டேக் உடன் முடித்திருந்தார். திரை பிரபலங்களின் விவாகரத்து பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து விட்டதாக ரசிகர்கள் கவலைப்பட்ட நேரத்தில், அந்த பிரிவு செய்தியிலும் ஹேஸ்டேக் பயன்படுத்தி இருப்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
'ஏ.ஆர். ரஹ்மான் தனது பிரிவினை அறிவிப்பதற்காக ஹேஷ்டேக்கை உருவாக்கிய ஆண்டாக 2024 வரலாற்றில் இடம்பிடிக்கும்' என ஒரு பயனர் கிண்டலடிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார். ஒரு சிலர், அவருடைய எக்ஸ் தளத்தை நிர்வகிப்பவர் இந்த பதிவை போட்டாரோ எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.




