டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி |
பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'கல்கி 2898 ஏடி' படம் நாளை மறுதினம் ஜூன் 27ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்து ஆந்திர மாநில அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி சிங்கிள் தியேட்டர்களில் 75 ரூபாயும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 125 ரூபாயும் உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு தெலங்கானா அரசு சிங்கிள் தியேட்டர்களுக்கு 75 ரூபாயும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு 100 ரூபாயும் உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்தது.
ஆந்திர அரசு அறிவித்த டிக்கெட் கட்டண உயர்வால் தற்போது சிங்கிள் தியேட்டர்களில் 236 ரூபாய் கட்டணமும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 324 ரூபாயும் இருக்கும். மேலும், இரண்டு வாரங்களுக்கு தினசரி 5 காட்சிகள் நடத்திக் கொள்ளவும் அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்துடன் ஒப்பிடும் போது ஆந்திர மாநிலத்தில் டிக்கெட் கட்டணம் கொஞ்சம் குறைவுதான். புதிதாக உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்களால் படத்தின் வசூல் தொகை அதிகமாகும்.