என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
இந்தியாவின் பிரபலமான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். தென்னிந்திய சினிமா மற்றும் ஹிந்தி சினிமாவிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். உருமி உள்ளிட்ட சில படங்களையும் இயக்கி உள்ளார். தேசிய விருது, பிலிம்பேர், பல்வேறு மாநில விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற இவருக்கு தற்போது ‛பியர் ஆஞ்சனியூஸ்' என்ற சர்வதேச விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் ஒளிப்பதிவில் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. வரும் மே 24ல் பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட இருக்கிறது. இந்த விருதை பெறும் முதல் இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.