'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
இந்தியாவின் பிரபலமான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். தென்னிந்திய சினிமா மற்றும் ஹிந்தி சினிமாவிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். உருமி உள்ளிட்ட சில படங்களையும் இயக்கி உள்ளார். தேசிய விருது, பிலிம்பேர், பல்வேறு மாநில விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற இவருக்கு தற்போது ‛பியர் ஆஞ்சனியூஸ்' என்ற சர்வதேச விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் ஒளிப்பதிவில் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. வரும் மே 24ல் பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட இருக்கிறது. இந்த விருதை பெறும் முதல் இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.