விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
தமிழில் ராஜா ராணி என்ற படத்தில் இயக்குனர் ஆனவர் அட்லீ. அதன் பிறகு விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து இயக்கியவர் தனது ஐந்தாவது படமாக ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் ஆயிரம் கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக அவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனிடத்தில் கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அட்லீ அளித்த ஒரு பேட்டியில், ஜவான் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறி உள்ளார். எப்போதுமே முதல் பாகத்தோடு முடிந்து விடும் கதைகளைதான் நான் தேர்வு செய்து படமாக்குவேன். ஆனால் இந்த ஜவான் படத்தை மட்டும் இரண்டு பாகம் இயக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். அதனால் சரியான சந்தர்ப்பம் அமையும்போது ஷாருக்கானை வைத்து ஜவான் இரண்டாம் பாகத்தை இயக்குவேன் என்று கூறி இருக்கிறார்.