எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

தமிழில் ராஜா ராணி என்ற படத்தில் இயக்குனர் ஆனவர் அட்லீ. அதன் பிறகு விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து இயக்கியவர் தனது ஐந்தாவது படமாக ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் ஆயிரம் கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக அவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனிடத்தில் கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அட்லீ அளித்த ஒரு பேட்டியில், ஜவான் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறி உள்ளார். எப்போதுமே முதல் பாகத்தோடு முடிந்து விடும் கதைகளைதான் நான் தேர்வு செய்து படமாக்குவேன். ஆனால் இந்த ஜவான் படத்தை மட்டும் இரண்டு பாகம் இயக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். அதனால் சரியான சந்தர்ப்பம் அமையும்போது ஷாருக்கானை வைத்து ஜவான் இரண்டாம் பாகத்தை இயக்குவேன் என்று கூறி இருக்கிறார்.