திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

தமிழில் ராஜா ராணி என்ற படத்தில் இயக்குனர் ஆனவர் அட்லீ. அதன் பிறகு விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து இயக்கியவர் தனது ஐந்தாவது படமாக ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் ஆயிரம் கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக அவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனிடத்தில் கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அட்லீ அளித்த ஒரு பேட்டியில், ஜவான் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறி உள்ளார். எப்போதுமே முதல் பாகத்தோடு முடிந்து விடும் கதைகளைதான் நான் தேர்வு செய்து படமாக்குவேன். ஆனால் இந்த ஜவான் படத்தை மட்டும் இரண்டு பாகம் இயக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். அதனால் சரியான சந்தர்ப்பம் அமையும்போது ஷாருக்கானை வைத்து ஜவான் இரண்டாம் பாகத்தை இயக்குவேன் என்று கூறி இருக்கிறார்.




