'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

நடிகர் விஜய் விரைவில் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றப்போவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத் தலைவர் புஸ்ஸி ஆனந்த் அவ்வப்போது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செய்து வரும் சமூக பணிகள் குறித்து அனைவரிடத்திலும் கேட்டறிந்தார்.
அப்போது ஒரு பெண் நிர்வாகி, தன்னை விஜய் ரசிகை என்று சொல்லி பேச தொடங்கிய போது, ‛‛இனிமேல் எப்போதும் தலைவரின் பெயரை சொல்லக்கூடாது, தளபதி என்று மட்டும் தான் சொல்ல வேண்டும்'' என்று மைக்கில் கூறி இருக்கிறார். அதையடுத்து அங்கு பேசியவர்கள் அனைவருமே விஜய்யின் பெயரை சொல்லாமல் தளபதி என்று மட்டுமே கூறியிருக்கிறார்கள்.