கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
நடிகர் விஜய் விரைவில் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றப்போவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத் தலைவர் புஸ்ஸி ஆனந்த் அவ்வப்போது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செய்து வரும் சமூக பணிகள் குறித்து அனைவரிடத்திலும் கேட்டறிந்தார்.
அப்போது ஒரு பெண் நிர்வாகி, தன்னை விஜய் ரசிகை என்று சொல்லி பேச தொடங்கிய போது, ‛‛இனிமேல் எப்போதும் தலைவரின் பெயரை சொல்லக்கூடாது, தளபதி என்று மட்டும் தான் சொல்ல வேண்டும்'' என்று மைக்கில் கூறி இருக்கிறார். அதையடுத்து அங்கு பேசியவர்கள் அனைவருமே விஜய்யின் பெயரை சொல்லாமல் தளபதி என்று மட்டுமே கூறியிருக்கிறார்கள்.