ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
நடிகர் விஜய் விரைவில் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றப்போவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத் தலைவர் புஸ்ஸி ஆனந்த் அவ்வப்போது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செய்து வரும் சமூக பணிகள் குறித்து அனைவரிடத்திலும் கேட்டறிந்தார்.
அப்போது ஒரு பெண் நிர்வாகி, தன்னை விஜய் ரசிகை என்று சொல்லி பேச தொடங்கிய போது, ‛‛இனிமேல் எப்போதும் தலைவரின் பெயரை சொல்லக்கூடாது, தளபதி என்று மட்டும் தான் சொல்ல வேண்டும்'' என்று மைக்கில் கூறி இருக்கிறார். அதையடுத்து அங்கு பேசியவர்கள் அனைவருமே விஜய்யின் பெயரை சொல்லாமல் தளபதி என்று மட்டுமே கூறியிருக்கிறார்கள்.