இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள சினிமாவின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான மம்முட்டிக்கு நேற்று பிறந்தநாள். மம்முட்டியின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மான் வெளியிடும் பதிவு கவனிக்கத்தக்கதாக இருக்கும். அந்த வரிசையில் நேற்று அவர் தந்தையின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாக பரவியது.
அவர் தனது வாழ்த்து பதிவில் “நான் சிறுவனாக இருந்தபோது உங்களைப்போல ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் முதன் முறையாக கேமரா முன்னால் நின்றபோது உங்களைப் போன்ற நடிகனாக வேண்டும் என விரும்பினேன். தந்தையானபோது நான் ஆக விரும்பிய அனைத்தும் நீங்களாக இருந்தீர்கள். என்றாவது ஒரு நாள் உங்களில் பாதியாக இருப்பேன் என்று நான் நம்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதாவது என் வாழ்நாளில் நீங்கள் படைத் சாதனைகளில் பாதியையாவது நான் படைத்து விடுவேன் என்கிற பொருள்படும்படியான இந்த பதிவு துல்கர் தந்தை மீது கொண்டிருக்கும் அன்பு. தன் மீது கொண்டிருக்கும் தன்னம்பிக்கை இவற்றை குறிப்பதாக பலரும் துல்கரை பாராட்டி வருகிறார்கள். இந்த பதிவுடன் தந்தையுடன் நிற்கும் கருப்பு வெள்ளை படத்தையும் துல்கர் வெளியிட்டுள்ளார்.