‛லொள்ளுசபா' வெங்கட்ராஜ் காலமானார்: நாளை வேளச்சேரியில் இறுதிசடங்கு | ‛என் தாய்மொழியை காக்க, பெரும் சேனை ஒன்று உண்டு': வெளியானது பராசக்தி டிரைலர் | அஜித் குமாரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட 4 இயக்குனர்கள்! | ரன்வீர் சிங் நடித்த ‛துரந்தர்' ஒரு தலைசிறந்த படைப்பு! -பாராட்டிய சூர்யா | பாரீசில் நாளை வெளியிடப்படும் வாரணாசி அறிவிப்பு டீசர்! | அஜித்தின் மங்காத்தா ஜனவரி 23ல் ரீரிலீஸ்! | புதிய சாதனை படைத்தது 'ஜனநாயகன்' டிரைலர் | 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் உரிமம் எத்தனை கோடி தெரியுமா? | யஷ் 40வது பிறந்தநாளில் 'டாக்சிக்' படத்தின் டிரைலர்! | 'அரசன்' படத்தில் தனுஷா? தாணு பதில் |

நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவரும் திருமணம் செய்து 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இனி தனி தனியாக வாழ்க்கையை தொடர போவதாக அறிவித்தனர். மகன்கள் இருவரும் அப்பா, அம்மா என இருவருடனும் சந்தோஷமாக இருந்து வருகின்றனர்.
நேற்று ஐஸ்வர்யா தனது தங்கை சவுந்தர்யாவின் மகன் பிறந்தநாளை குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளனர். இதில் ஐஸ்வர்யா உடன் யாத்ரா, லிங்கா என இருவரும் கலந்து கொண்டனர். மூத்த மகனின் போட்டோ பதிவிட்டு, ‛ஒரு நாள் உங்கள் மகனை நிமிர்ந்து பார்த்து என்ன செய்தீர்கள் என்பதை நினைத்து பெருமைப்படும் தருணம்' என பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா. இந்த போட்டோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




