மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் |
நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவரும் திருமணம் செய்து 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இனி தனி தனியாக வாழ்க்கையை தொடர போவதாக அறிவித்தனர். மகன்கள் இருவரும் அப்பா, அம்மா என இருவருடனும் சந்தோஷமாக இருந்து வருகின்றனர்.
நேற்று ஐஸ்வர்யா தனது தங்கை சவுந்தர்யாவின் மகன் பிறந்தநாளை குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளனர். இதில் ஐஸ்வர்யா உடன் யாத்ரா, லிங்கா என இருவரும் கலந்து கொண்டனர். மூத்த மகனின் போட்டோ பதிவிட்டு, ‛ஒரு நாள் உங்கள் மகனை நிமிர்ந்து பார்த்து என்ன செய்தீர்கள் என்பதை நினைத்து பெருமைப்படும் தருணம்' என பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா. இந்த போட்டோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.