தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவரும் திருமணம் செய்து 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இனி தனி தனியாக வாழ்க்கையை தொடர போவதாக அறிவித்தனர். மகன்கள் இருவரும் அப்பா, அம்மா என இருவருடனும் சந்தோஷமாக இருந்து வருகின்றனர்.
நேற்று ஐஸ்வர்யா தனது தங்கை சவுந்தர்யாவின் மகன் பிறந்தநாளை குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளனர். இதில் ஐஸ்வர்யா உடன் யாத்ரா, லிங்கா என இருவரும் கலந்து கொண்டனர். மூத்த மகனின் போட்டோ பதிவிட்டு, ‛ஒரு நாள் உங்கள் மகனை நிமிர்ந்து பார்த்து என்ன செய்தீர்கள் என்பதை நினைத்து பெருமைப்படும் தருணம்' என பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா. இந்த போட்டோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.