பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
நடிகர் சூரி முதன்முறையாக கதையின் நாயகனாக மாறி வெற்றிமாறன் இயக்கத்தில் ‛விடுதலை' என்கிற படத்தில் நடித்தார். நடிகர் விஜய்சேதுபதி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த மார்ச் இறுதியில் வெளியான இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இரண்டாம் பாகத்திற்கு மீதம் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானல் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மதுரை அருகில் உள்ள நடிகர் சூரியின் சொந்த ஊரான ராஜாக்கூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு நடிகர் சூரியும், விஜய் சேதுபதியும் சென்று அம்மன் தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளனர். தற்போது கோயில் திருவிழா நடைபெறுகிறது என்பதால் கோயிலுக்கு வருகை தந்த அவர்கள், சாமி கும்பிட்டு விட்டு வெளியே வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.