இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் சூரி முதன்முறையாக கதையின் நாயகனாக மாறி வெற்றிமாறன் இயக்கத்தில் ‛விடுதலை' என்கிற படத்தில் நடித்தார். நடிகர் விஜய்சேதுபதி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த மார்ச் இறுதியில் வெளியான இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இரண்டாம் பாகத்திற்கு மீதம் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானல் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மதுரை அருகில் உள்ள நடிகர் சூரியின் சொந்த ஊரான ராஜாக்கூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு நடிகர் சூரியும், விஜய் சேதுபதியும் சென்று அம்மன் தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளனர். தற்போது கோயில் திருவிழா நடைபெறுகிறது என்பதால் கோயிலுக்கு வருகை தந்த அவர்கள், சாமி கும்பிட்டு விட்டு வெளியே வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.