பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
இசை அமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து, இயக்கி, இசை அமைத்து, நடித்து வருகிறார். இந்த படம் முதலில் நாளை வெளிவருதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது தள்ளி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த படத்துக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மாங்காடு மூவிஸ் பட நிறுவனம் சார்பில் ராஜகணபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், “பாண்டியராஜன் நடித்த ஆய்வுக்கூடம் என்ற படத்தை 2016ம் ஆண்டு தயாரித்து வெளியிட்டோம். அந்த படத்தின் கதையை எங்களிடம் கேட்காமல், பிச்சைக்காரன் 2 என்ற தலைப்பில் விஜய் ஆண்டனி எடுத்துள்ளார். இதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் ஆண்டனி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார். ஆனால், மே மாதம்தான் இந்த திரைப்படத்தை வெளியிட உள்ளோம். எனவே, தடை எதுவும் பிறப்பிக்க வேண்டாம்'' என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து, விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.