22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கணவன் மனைவியாக நடித்து பிரபலமான ஜோடி வீஜே தீபிகா - சரவண விக்ரம். இவர்களது கெமிஸ்ட்ரி ஆன் ஸ்கிரீனில் அந்த அளவுக்கு சிறப்பாக இருந்ததோடு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. திரையை தாண்டி நிஜ வாழ்க்கையிலுமே இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வரவே, தீபிகாவும் சரவணனும் காதலிப்பதாக செய்திகளும் பரவியது. இதற்கு பலமுறை 'இல்லை, நாங்கள் நல்ல நண்பர்கள்' என இருவருமே சேர்ந்து விளக்கமளித்துள்ளனர். எனினும், இன்றளவும் நெருங்கிய நட்பிலேயே பயணித்து வருகின்றனர். இதைபார்த்து விட்டு பலரும் வதந்தியாக இருந்தாலுமே இருவரும் நல்ல ஜோடி தான் என வாழ்த்துகளும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், திருமண கோலத்தில் வீஜே தீபிகாவும் - சரவணனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் இருவரது ஜோடி பொருத்தமும் படு சூப்பர். இதை பார்த்துவிட்டு ரசிகர்கள் சிலர் 'சொல்லாம கொள்ளாம திருமணம் செஞ்சிட்டாங்களா?' என அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், அது வெறும் போட்டோஷூட்டுக்காக மட்டுமே எடுக்கப்பட்டது என்பது ரசிகர்களுக்கு லேட்டாக தான் தெரிய வந்தது.