ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
ராஜமவுலியின் இயக்கத்தில் பாகுபலி படத்தை தொடர்ந்து ராம்சரண் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பையும், பாசிட்டிவான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. ராஜமவுலி என்றாலே பிரமாண்டம் தான் என்கிற நிலையில் அவரது ஒவ்வொரு படமும் இனி இப்படித்தான் இருக்கும் என எதிர்பார்க்க வைத்து விட்டது. அதேசமயம் அவர் எளிமையான படங்களையும் இயக்க விரும்புபவர் என்பது சமீபத்திய அவரது பேட்டியில் வெளிப்பட்டது.
அந்த வகையில் அவரிடம் நீங்கள் பார்த்து ரசித்த படங்களில் நீங்களே இயக்க விரும்பிய படம் எது என்பது குறித்து கேட்கப்பட்டபோது, திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களையும் நான் இயக்க விரும்பினேன் என்று கூறியுள்ளார் ராஜமவுலி. இதுபற்றி அவர் கூறியபோது, த்ரிஷ்யம் படத்தின் ஸ்கிரிப்ட் பயங்கரமாக எழுதப்பட்டுள்ளது என்றும் புத்திசாலித்தனமான, எளிமையான, உணர்வுபூர்வமான அதேசமயம் படு திரில்லிங்கான கலவையாக உருவாகியுள்ள இந்தப்படம் பார்வையாளர்களை எல்லா வகையிலும் திருப்திப்படுத்தியது. இதுபோன்ற படத்தை இயக்குவதற்கு தான் விரும்பியதாகவும் கூறினார் ராஜமவுலி..