'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
ராஜமவுலியின் இயக்கத்தில் பாகுபலி படத்தை தொடர்ந்து ராம்சரண் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பையும், பாசிட்டிவான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. ராஜமவுலி என்றாலே பிரமாண்டம் தான் என்கிற நிலையில் அவரது ஒவ்வொரு படமும் இனி இப்படித்தான் இருக்கும் என எதிர்பார்க்க வைத்து விட்டது. அதேசமயம் அவர் எளிமையான படங்களையும் இயக்க விரும்புபவர் என்பது சமீபத்திய அவரது பேட்டியில் வெளிப்பட்டது.
அந்த வகையில் அவரிடம் நீங்கள் பார்த்து ரசித்த படங்களில் நீங்களே இயக்க விரும்பிய படம் எது என்பது குறித்து கேட்கப்பட்டபோது, திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களையும் நான் இயக்க விரும்பினேன் என்று கூறியுள்ளார் ராஜமவுலி. இதுபற்றி அவர் கூறியபோது, த்ரிஷ்யம் படத்தின் ஸ்கிரிப்ட் பயங்கரமாக எழுதப்பட்டுள்ளது என்றும் புத்திசாலித்தனமான, எளிமையான, உணர்வுபூர்வமான அதேசமயம் படு திரில்லிங்கான கலவையாக உருவாகியுள்ள இந்தப்படம் பார்வையாளர்களை எல்லா வகையிலும் திருப்திப்படுத்தியது. இதுபோன்ற படத்தை இயக்குவதற்கு தான் விரும்பியதாகவும் கூறினார் ராஜமவுலி..