ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
சினிமா துறையில் பாலியல் தொல்லை இருப்பதாக பல நடிகைகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். மீ டூ புகார் அளித்து பரபரப்பு ஏற்படுத்தினார்கள். தயாரிப்பாளர் முதல் பாடல் ஆசிரியர் வரை மீ டூ புகாரில் சிக்கினர்.
சினிமாவில் செல்வாக்கு மிக்க புன்புலத்தில் இருந்து வந்த நடிகைகளும் தங்களுக்கு பாலியல் தொல்லை இருந்தது என்று கூறி வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழ் சினிமாவின் பெரிய ஆளுமையான சரத்குமாரின் மகள் வரட்சுமி ஒரு தொலைக்காட்சியின் உயர் அதிகாரி தன்னை தவறாக அணுகியதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் செல்வாக்கு மிக்க நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மோகன்பாபுவின் மகளும், நடிகையுமான லட்சுமி மஞ்சுவும் தனக்கும் பாலியல் தொல்லை இருந்ததாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நானும் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டுள்ளேன். சக்தி வாய்ந்த ஒருவரின் மகள் என்பதால், எனக்கு எதவும் அப்படி நடக்காது என்றுதான் ஆரம்பத்தில் நம்பி இருந்தேன். ஆனால் இரக்க மற்றவர்களை நானும் சந்திக்க வேண்டியது இருந்தது. என்று கூறியுள்ளார்.
இவர்களுக்கே இப்படி என்றால் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வரும் பெண்களின் பாதுகாப்பு மிகுந்த கவலை அளிப்பதாக சினிமா ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.