ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

ஆர்ஆர்ஆர் என்கிற பிரமாண்டமான படம் ஜன-7ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு புரமோஷன் நிகழ்ச்சிகளை எல்லாம் களைகட்டும் விதமாக நடத்தி ரிலீஸுக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில், தற்போது ஒமிக்ரான் பரவல் காரணமாக 50 சதவீத பார்வையாளர்களுக்கே அனுமதி என்கிற அரசின் நிபந்தனையால் தற்போதைக்கு ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் இல்லை என அறிவித்து விட்டார்கள்.. இந்தப்படத்தின் திடீர் விலகலால், தமிழில் ஜன-26ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்த விஷாலின் வீரமே வாகை சூடும் படம் ஜன-14ஆம் தேதிக்கு தங்களது ரிலீஸை மாற்ற முயற்சிக்கிறது.
அதேபோல தெலுங்கிலும் ஆர்ஆர்ஆர் ரிலீஸ் தள்ளிப்போவதால், அதை சாதகமாக்கி சில படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அந்தவகையில் கழுகு பட இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் ராணா நடிப்பில் உருவாகியுள்ள '1945' என்கிற படம் வரும் ஜன-7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரெஜினா கதாநாயகியாக நடிக்க, நாசர், சத்யராஜ், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும் மடை திறந்து என்கிற பெயரில் உருவானது
ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த சில வருடங்களாகவே இந்தப்படம் கிடப்பில் கிடந்தது. இந்தநிலையில் தெலுங்கில் '1945' என்கிற பெயரில் வெளியாகிறது.