திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ஆர்ஆர்ஆர் பட புரமோஷனுக்காக படக்குழுவினர் அடிக்கடி சென்னைக்கு வந்து பத்திரிகையாளர் சந்திப்பிலும் தொலைக்காட்சி பேட்டிகளிலும் கலந்துகொண்டு வந்தனர். படங்களை பற்றி பேசுவது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் தமிழ் திரையுலகில் உள்ள ஜாம்பவான்களை புகழவும் அவர்கள் தவறவில்லை. அந்தவகையில் சமீபத்தில் பேட்டியளித்த ஜூனியர் என்டிஆர், நடிகர் விஜய் குறித்த தனது கருத்துக்களை கூறியுள்ளார்.
“விஜய் என்னுடைய நண்பர், சீனியர் மற்றும் வழிகாட்டி.. அவர் தனக்கான அபரிமிதமான புகழை ஒருபோதும் தலையில் ஏற்றிக்கொள்வது இல்லை. அந்தளவுக்கு எளிமையாகவும் சராசரி மனிதனாகவும் இருக்கிறார். விஜய்யைப்போல இருப்பது என்பது ரொம்பவே கடினமானது” என்று கூறியுள்ளார் ஜூனியர் என்டிஆர்.