
மழையின் தாக்கம், அடுத்து வரும் படங்கள் சமாளிக்குமா?
கடந்த வாரம் வெளியான "வேட்டையன்" படத்தின் வசூல் கடந்த இரண்டு நாட்களாக கொஞ்சம் பாதிப்படைந்ததாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மழையை முன்னிட்டு சில தியேட்டர்களில் நேற்றைய மாலை, இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின.
இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி "அமரன், பிளடி பெக்கர், பிரதர்," ஆகிய படங்களும், நவம்பர் 14ம் தேதி "கங்குவா" படமும் வெளியாக உள்ளது. அந்த சமயங்களில் மழை எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே அப்படங்களுக்கான ரசிகர்களின் வருகை இருக்கும். இந்த வருடம் வழக்கத்தை விட அதிகமான மழை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால், அடுத்து வர உள்ள படங்கள் அதை சமாளிக்குமா என்ற அச்சமும் தியேட்டர் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!