
பிளாஷ்பேக் : எம்.எஸ்.விக்கு அம்மாவிடம் அடி வாங்கி கொடுத்த கே.வி.மகாதேவன்
இந்த நிலையில் கே.வி.மகாதேவன் இசையமைப்பில் வெளியான படங்களில் நடித்த எம்ஜிஆர் தனது அடுத்த படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனை இசை அமைக்கச் சொல்லி அணுகினார். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் ஆசைதான். ஆனால் அவர் தன் தாயிடம் இதுபற்றி கூறிய போது அவரது தாயார் விஸ்வநாதன் கன்னத்தில் பளார் என்று அரைந்தாராம். "மகாதேவன் தொடர்ந்து இசையமைக்கும் கம்பெனிகளுக்கு நீயேன் இசையமைக்க ஒப்புக் கொள்கிறாய்? அது கூடாது, அவர் இசை உலகின் மாகாதேவன், அவரை உன்னால் வெல்ல முடியாது, ஆனாலும் முயற்சி செய்” என்றாராம்.
இந்த தகவலை எம்.எஸ்.விஸ்வநாதன் மேடை நிகழ்ச்சி ஒன்றில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அப்படிப்பட்ட கே.வி.மகாதேவனுக்கு இன்று 23வது நினைவு நாள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!