
கள்ளக்குறிச்சி சம்பவம் : தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என விஜய் உத்தரவு
கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 52 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேற்று விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நாளை(ஜூன் 22) விஜய்யின் 50வது பிறந்தநாள், இதை அவரது ரசிகர்கள் விமரிசையாக கொண்டாட தயார் ஆனார்கள். ஆனால் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என கூறி விட்டார் விஜய்.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குத் தலைவர் விஜய், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
எனவே கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்"".
இவ்வாறு தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!