
ஜெர்மனியில் விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட அர்னால்டு
இந்த கைகடிகாரத்தை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு வழங்க உள்ளதாக அர்னால்டு தெரிவித்தார். ஆனால் அதை அதிகாரிகள் ஏற்கவில்லை. இதையடுத்து அபராதம் மற்றும் வரி ஆகியவற்றை சேர்த்து 35,000 யூரோக்கள் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். அர்னால்டு தன்னிடம் கையில் பணம் இல்லை என்றும், ஆன்லைன் வாயிலாக செலுத்துவதாகவும் கூறி உள்ளார். ஆனால் அதிகாரிகள் பாதி தொகையை ரொக்கமாக தான் செலுத்த வேண்டும் என நிர்பந்தித்துள்ளனர். இதையடுத்து வங்கி ஏடிஎம் சென்று ரொக்க தொகையை எடுத்து வந்து அர்னால்டு செலுத்தினார். இதையடுத்து அவரை விமான நிலைய அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் கிட்டத்தட்ட 3 மணிநேரம் விமான நிலையத்தில் அர்னால்டு தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!