
மும்பையில் கன்னட பட புரமோசனிலும் பிரபுவை மிமிக்ரி செய்து கலாய்த்த ஜெயராம்
பான் இந்திய படமாக வெளியாகும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் ஜெயராமிடம் அவர் ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னத்தையும் நடிகர் பிரபுவையும் மிமிக்ரி செய்து கலகலப்பூட்டி நிகழ்ச்சியை நினைவுபடுத்திய செய்தியாளர் ஒருவர் அதேபோல இங்கேயும் செய்து காட்ட முடியுமா என்று கேட்டார்.
அதற்கு முதலில் யோசித்த ஜெயராம் பின்னர் பிரபுவை போலவே மிமிக்ரி செய்ய ஆரம்பித்தார். ஆனால் இந்தமுறை, “நாளை நான் சென்னை செல்ல போகிறேன்.. அங்கு என்னை பிரபு சார் பார்த்ததும், என்ன மும்பை போனாலும் என்னை மிமிக்ரி செய்து கிண்டல் பண்ணுகிறாயா ? உன்னை அடிக்கப் போகிறேன் என்று திட்டப் போகிறார்” என்பது போல பிரபுவின் குரலிலேயே மிமிக்கிரி செய்து அசத்தினார் ஜெயராம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!