
நடிகை ஆன எழுத்தாளர் மனைவி
மே 17, 2021
Advertisement
பிரபல தமிழ் எழுத்தாளர் விக்ரமாதித்யன். திருநெல்வேலியை சேர்ந்த இவர் ஆகாசம் நீல நிறம், ஊரும் காலம், உள்வாங்கும் உலகம் உள்ளிட்ட 16 கவிதை நூல்களை எழுதி உள்ளார். எனக்கும் என் தெய்வத்துக்கும் இடையேயான வழக்கு. அவன் அவள், தன்மை முன்னிலை படர்க்கை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
இயக்குனர் பாலா அவரை நான் கடவுள் படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தினார். அந்த படத்தில் அவர் பிச்சைக்காரனாக நடித்து பேசும் வசனங்கள் மிகவும் பிரபலம். அதன்பிறகும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரது மனைவியும் நடிகை ஆகியுள்ளார்.
எழுத்தாளர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன் இயக்கி உள்ள இன்ஷா அல்லாஹ் என்ற படத்தில் விக்ரமாதித்யன் மனைவியாக அவரது நிஜ மனைவி பகவதி அம்மாள் நடித்துள்ளார். இஸ்லாமிய மக்களின் வாழ்வியலை சொல்லும் இந்தப் படத்தில் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் எழுதிய சிறுகதை ஒன்று இடம் பெறுகிறது. இந்த கதை முதிய இஸ்லாமிய தம்பதிகளின் வாழ்க்கையை பற்றியது. இந்த கதையில் விக்ரமாதித்யனும் அவரது மனைவி பகவதி அம்மாளும் கணவன், மனைவியாக நடித்துள்ளனர்.
இயக்குனர் பாலா அவரை நான் கடவுள் படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தினார். அந்த படத்தில் அவர் பிச்சைக்காரனாக நடித்து பேசும் வசனங்கள் மிகவும் பிரபலம். அதன்பிறகும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரது மனைவியும் நடிகை ஆகியுள்ளார்.
எழுத்தாளர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன் இயக்கி உள்ள இன்ஷா அல்லாஹ் என்ற படத்தில் விக்ரமாதித்யன் மனைவியாக அவரது நிஜ மனைவி பகவதி அம்மாள் நடித்துள்ளார். இஸ்லாமிய மக்களின் வாழ்வியலை சொல்லும் இந்தப் படத்தில் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் எழுதிய சிறுகதை ஒன்று இடம் பெறுகிறது. இந்த கதை முதிய இஸ்லாமிய தம்பதிகளின் வாழ்க்கையை பற்றியது. இந்த கதையில் விக்ரமாதித்யனும் அவரது மனைவி பகவதி அம்மாளும் கணவன், மனைவியாக நடித்துள்ளனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!