
காட்டின் வளம் பேசும் வனம் தியேட்டரில் இன்று ரிலீஸ்
விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்ய, ரான் ஈதன் யோஹன் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று தியேட்டரில் வெளியாகிறது. மாணவர் விடுதி அறையில் நிகழும் மர்ம தற்கொலைகளும், அதன் பின்னணியில், ஜமீன்தாரின் வெறியாட்டத்தோடு, அமானுஷ்ய சக்திகளையும் இணைத்து கதைக்களம் அமைத்து உள்ளனர். குறிப்பாக, காடுகளின் முக்கியத்துவத்தையும், பளியர் என்ற பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் இப்படத்தில் எடுத்துரைத்துள்ளது சிறப்பம்சம்.
முக்கியமாக படத்திற்காக, இரண்டு மாதம் கடுமையாக உழைத்து, படப்பிடிப்பு தளத்தை கச்சிதமாக தேர்வு செய்து உள்ளனர். படத்தின் பெரிய பலமே ஒளிப்பதிவு தான். விக்ரம் மோகனுக்கு இது முதல் படம். தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளார். காட்டுக்குள்ளேயே சென்று வந்த பிரமிப்பை, வனம் படத்தை பார்க்கும் போது உணரலாம். பின்னணி இசை படத்திற்கே உரிய மிரட்டல். படத்தை கோல்டன் ஸ்டார் ஸ்டூடியோ சார்பில் கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜே.பி.அமலன், ஜே.பி.அலெக்ஸ் தயாரித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!