
ரீ ரிலீசாகிறது இதயத்தை திருடாதே
சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான தேசிய விருது பெற்ற இந்தப் படம், ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்றது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குறுகிய காலமே உயிர்வாழப் போகும் ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கும் கதை. இளையராஜா இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. முக்கியமாக, ஓ பிரியா பிரியா, ஓ பாப்பா லாலி பாடல்கள் இன்று வரை கேட்கப்படும் பாடல்களாக இருக்கின்றன.
இந்த நிலையில், 37 ஆண்டுகளுக்குப் பிறகு தொழில்நுட்ப மெருகேற்றம் செய்யப்பட்டு வருகிற 28ம் தேதி ரீ- ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாக்யலட்சுமி எண்டர்பிரைசஸ், ஸ்ரீபத்மினி சினிமா, டபிள்யூ.என் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!