
அழகிக்கு பிறகு அழுத்தமான கதை : தங்கர் பச்சான்
செப் 15, 2022
Advertisement
தங்கர் பச்சான் இயக்கி வரும் புதிய படம் "கருமேகங்கள் கலைகின்றன". பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், மம்தா மோகன்தாஸ் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்து வருகின்றனர்.
படம் பற்றி தங்கர் பச்சான் கூறுகையில், ""பல்வேறு மனிதர்களின் பலவிதமான மனங்கள். மனித உணர்வுகளின் உணர்ச்சித் ததும்பல்கள், சம்பவங்கள் நிறைந்து இருக்கும். உறவுகளின் சிக்கல்கள் குறித்தும் பேசுகிறது. என்னுடைய சிறுகதையை தழுவித்தான் இந்த படத்தை எடுக்கிறேன். ஒவ்வொருத்தரும் கிடைத்த வாழ்க்கையை கடந்து வந்து விடுகிறோம். திரும்பிப் பார்த்து சரியாக இருந்திருக்கிறோமா. இதை நமக்கு நாமே கேள்வி கேட்டுக்கிட்டால் எல்லோரும் மாட்டிக்குவோம். அழகிக்கு பிறகு இவ்வளவு அழுத்தமாக இப்படம் உருவாகிறது.
நாஞ்சில் நாடன் கதையை எடுத்தேன். "கல்வெட்டு" கதையை "அழகி"யாக்கினேன். "அம்மாவின் கைப்பேசி", "ஒன்பது ரூபாய் நோட்டு". அப்படிதான், "கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன" இன்ற என் சிறு கதை, இப்போது "கருமேகங்கள் கலைகின்றன"வாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்"" என்றார்.
படம் பற்றி தங்கர் பச்சான் கூறுகையில், ""பல்வேறு மனிதர்களின் பலவிதமான மனங்கள். மனித உணர்வுகளின் உணர்ச்சித் ததும்பல்கள், சம்பவங்கள் நிறைந்து இருக்கும். உறவுகளின் சிக்கல்கள் குறித்தும் பேசுகிறது. என்னுடைய சிறுகதையை தழுவித்தான் இந்த படத்தை எடுக்கிறேன். ஒவ்வொருத்தரும் கிடைத்த வாழ்க்கையை கடந்து வந்து விடுகிறோம். திரும்பிப் பார்த்து சரியாக இருந்திருக்கிறோமா. இதை நமக்கு நாமே கேள்வி கேட்டுக்கிட்டால் எல்லோரும் மாட்டிக்குவோம். அழகிக்கு பிறகு இவ்வளவு அழுத்தமாக இப்படம் உருவாகிறது.
நாஞ்சில் நாடன் கதையை எடுத்தேன். "கல்வெட்டு" கதையை "அழகி"யாக்கினேன். "அம்மாவின் கைப்பேசி", "ஒன்பது ரூபாய் நோட்டு". அப்படிதான், "கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன" இன்ற என் சிறு கதை, இப்போது "கருமேகங்கள் கலைகின்றன"வாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்"" என்றார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!