
மீண்டும் நடிக்க வருகிறார் தனன்யா
மார் 02, 2023
Advertisement
2009ம் ஆண்டு வெளியான "குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்" படத்தில் நடித்தவர் தனன்யா. இதில் சேரனின் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் கதை நாயகனாக நடித்திருந்தார். அதன்பிறகு தனன்யா "வெயிலோடு விளையாடு" என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
டாக்டராக படித்துக் கொண்டிருந்த தனன்யா படிப்பை தொடர சென்று விட்டார். படித்து முடித்து டாக்டராகிவிட்ட தனன்யா அதன்பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜியோன் ஆர்யான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
இந்த நிலையில் தற்போது தனது புதிய தோற்றத்தை வெளியிட்டுள்ளார். தனியாக போட்டோ ஷூட்டும் நடத்தி உள்ளார். கணவரின் அனுமதியோடு மீண்டும் தனன்யா நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல கதைகளில் நடிக்க இருப்பதாகவும், ஹீரோயின் என்று இல்லாமல் மற்ற கேரக்டர்களில் அவர் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
டாக்டராக படித்துக் கொண்டிருந்த தனன்யா படிப்பை தொடர சென்று விட்டார். படித்து முடித்து டாக்டராகிவிட்ட தனன்யா அதன்பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜியோன் ஆர்யான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
இந்த நிலையில் தற்போது தனது புதிய தோற்றத்தை வெளியிட்டுள்ளார். தனியாக போட்டோ ஷூட்டும் நடத்தி உள்ளார். கணவரின் அனுமதியோடு மீண்டும் தனன்யா நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல கதைகளில் நடிக்க இருப்பதாகவும், ஹீரோயின் என்று இல்லாமல் மற்ற கேரக்டர்களில் அவர் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!