
அரபு நாடுகளில் சீதாராமம் வெளியிட தடை நீங்கியது
ஆக 11, 2022
Advertisement
கடந்த வாரம் துல்கர் சல்மான் தெலுங்கில் நடித்துள்ள சீதா ராமம் என்கிற படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் மற்றும் முக்கிய வேடத்தில் ராஷ்மிகா மந்தனா இருவரும் நடித்துள்ளனர். இந்த படத்தை ஹனுராகவபுடி என்பவர் இயக்கியுள்ளார். 1970களில் ராணுவ பின்னணியில் நடக்கும் காதல் கதையாக இந்த படம் வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்டிருந்தது ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து விட்டது.
பொதுவாகவே அரபு நாடுகளில் துல்கர் சல்மானின் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு உண்டு. அதேசமயம் சீதாராமம் என வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் டைட்டில் சென்சிட்டிவாக இருந்ததால் இந்தப்படம் ஐக்கிய அரபு நாடுகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கே உள்ள சென்சார் போர்டு இந்த படத்தை வெளியிடலாம் என சான்றிதழ் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று (ஆக-11) முதல் தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் சீதாராமம் ஐக்கிய அரபு நாடுகளில் வெளியாகிறது.
பொதுவாகவே அரபு நாடுகளில் துல்கர் சல்மானின் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு உண்டு. அதேசமயம் சீதாராமம் என வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் டைட்டில் சென்சிட்டிவாக இருந்ததால் இந்தப்படம் ஐக்கிய அரபு நாடுகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கே உள்ள சென்சார் போர்டு இந்த படத்தை வெளியிடலாம் என சான்றிதழ் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று (ஆக-11) முதல் தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் சீதாராமம் ஐக்கிய அரபு நாடுகளில் வெளியாகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!