
கார்த்திக்கு நன்றி சொன்ன ஷர்வானந்த்
ஆக 29, 2022
Advertisement
மிகப்பெரிய வெற்றி பெற்ற எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் ஷர்வானந்த். அதைத்தொடர்ந்து ஒன்றிரண்டு தமிழ் படங்களில் நடித்தவர், தற்போது தெலுங்கில் ஓகே ஓக ஜீவிதம் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் கணம் என்கிற பெயரில் வெளியாகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்க, நடிகை அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்..
இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தங்களது குடும்ப தயாரிப்பு நிறுவனம் என்பதால், நட்புக்காக நடிகர் கார்த்தி இந்த படத்தில் ஒரு பாடலைப் பாடி உள்ளதோடு குழந்தைகளுடன் சேர்ந்து அந்த பாடலிலும் பாடலிலும் நடித்துள்ளார். இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள ஷர்வானந்த் கார்த்தியை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துள்ளார்
இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தங்களது குடும்ப தயாரிப்பு நிறுவனம் என்பதால், நட்புக்காக நடிகர் கார்த்தி இந்த படத்தில் ஒரு பாடலைப் பாடி உள்ளதோடு குழந்தைகளுடன் சேர்ந்து அந்த பாடலிலும் பாடலிலும் நடித்துள்ளார். இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள ஷர்வானந்த் கார்த்தியை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!