
ஜூனியர் என்டிஆர் நிகழ்ச்சியில் சமந்தா
அக் 07, 2021
Advertisement
காத்து வாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் படங்களில் நடித்து வரும் சமந்தா, விரைவில் தனது புதிய படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது விவாகரத்து குறித்த தகவலை சோசியல் மீடியாவில் வெளியிட்ட சமந்தா, தற்போது சோசியல் மீடியாவில் தனது அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு அவர் தெலுங்கு டிவி சேனலில் ஜூனியர் என்டிஆர் நடத்தி வரும் எவரு மீலோ கோடீஸ்வரலு என்ற ரியாலிட்டி ஷோவில் சிறப்பு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆர் கேட்ட கடினமான கேள்விகளுக்கு பதிலளித்த சமந்தா, ரூ. 25 லட்சம் வென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு இதே நிகழ்ச்சியில் ராஜமவுலி, ராம் சரண், கொரட்டல்ல சிவா உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு அவர் தெலுங்கு டிவி சேனலில் ஜூனியர் என்டிஆர் நடத்தி வரும் எவரு மீலோ கோடீஸ்வரலு என்ற ரியாலிட்டி ஷோவில் சிறப்பு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆர் கேட்ட கடினமான கேள்விகளுக்கு பதிலளித்த சமந்தா, ரூ. 25 லட்சம் வென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு இதே நிகழ்ச்சியில் ராஜமவுலி, ராம் சரண், கொரட்டல்ல சிவா உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!