
அல்லு அர்ஜுனை பாராட்டித் தள்ளிய சமந்தா
படத்தைப் பார்த்து சமந்தா கூறுகையில், “இது அல்லு அர்ஜுனைப் பாராட்டும் ஒரு பதிவு. ஒவ்வொரு நொடியும் உங்களை கவர்ந்திழுக்கும் ஒரு நடிப்பு. ஒரு நடிகர் எப்போதும் சிறப்பாக செயல்படும் போது அவரை விட்டு விலகிப் பார்ப்பது முடியாத ஒன்று. "புஷ்பா" படத்தில் அல்லு அர்ஜுன் எனக்கு அப்படித்தான் தெரிகிறார். பேச்சு நடை, தோளை இறக்கி நடக்கும் நடை… அச்சோ... நிஜமாகவே பிரமிப்பு, மிவும் உத்வேகமான ஒன்று,” எனப் பாராட்டியுள்ளார்.
சமந்தாவின் பாராட்டிற்கு, “மனப்பூர்வமான பாராட்டுக்களுக்கு நன்றி டியர், தொட்டுவிட்டீர்கள்,” என அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!