
மூளையை கழற்றி விட்டுத்தான் தென்னிந்திய படங்களில் நடிப்பேன்: ராகுல் தேவ்
ஏப் 04, 2023
Advertisement
பாலிவுட் வில்லன் நடிகர் ராகுல் தேவ். தமிழில் நரசிம்மா, முனி, ஆதவன், வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தி லெஜண்ட் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். சமீபத்தில் தனது நேர்காணல் ஒன்றில் தென்னிந்திய படங்கள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: நிஜ வாழ்க்கைக்கு சிறிதும் தொடர்பில்லாத வகையில் தென்னிந்திய படங்கள் உருவாகின்றன. அதில் வரும் ஆக்ஷன் காட்சிகள் லாஜிக் மீறல்களாக இருக்கின்றன. குறிப்பாக, 1980களில் வந்த பாணியை பின்பற்றித்தான் இப்போதைய தென்னிந்திய படங்களை எடுக்கிறார்கள். ஆனால் ஹீரோயிச மாயை வைத்தும், பொழுதுபோக்கு அம்சங்களை நிரப்பியும் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள். நானே கூட இதுபோன்ற படங்களில் நடித்திருக்கிறேன்.
அப்போது எனது மூளையை கழற்றி வீட்டில் வைத்துவிட்டுதான் படப்பிடிப்புக்கு செல்வேன். ஜிம் பாடியான என்னை, வலுவிழந்த ஹீரோ அடித்து உதைப்பதை நான் சகித்துக்கொண்டுதான் ஆக வேண்டும். தியேட்டரில் அதற்கு கைதட்டல் விழுந்தால்கூட நான் அமைதியாகத்தான் இருக்க வேண்டும். இதில் எது சரி, எது தவறு என சொல்ல வரவில்லை.
அதேசமயம், கற்பனைக்கு றெக்கை கட்டும்போது அதை சாமானிய ரசிகன் ரசித்து பார்க்கிறான். இரண்டு பேர் நிஜத்தில் சண்டையிட்டால், அவர்கள் தங்களது ஜிம் பாடியை காட்ட மாட்டார்கள். ஆனால் சினிமாவில் சட்டையை கிழித்து சிக்ஸ்பேக்கை காட்ட வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: நிஜ வாழ்க்கைக்கு சிறிதும் தொடர்பில்லாத வகையில் தென்னிந்திய படங்கள் உருவாகின்றன. அதில் வரும் ஆக்ஷன் காட்சிகள் லாஜிக் மீறல்களாக இருக்கின்றன. குறிப்பாக, 1980களில் வந்த பாணியை பின்பற்றித்தான் இப்போதைய தென்னிந்திய படங்களை எடுக்கிறார்கள். ஆனால் ஹீரோயிச மாயை வைத்தும், பொழுதுபோக்கு அம்சங்களை நிரப்பியும் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள். நானே கூட இதுபோன்ற படங்களில் நடித்திருக்கிறேன்.
அப்போது எனது மூளையை கழற்றி வீட்டில் வைத்துவிட்டுதான் படப்பிடிப்புக்கு செல்வேன். ஜிம் பாடியான என்னை, வலுவிழந்த ஹீரோ அடித்து உதைப்பதை நான் சகித்துக்கொண்டுதான் ஆக வேண்டும். தியேட்டரில் அதற்கு கைதட்டல் விழுந்தால்கூட நான் அமைதியாகத்தான் இருக்க வேண்டும். இதில் எது சரி, எது தவறு என சொல்ல வரவில்லை.
அதேசமயம், கற்பனைக்கு றெக்கை கட்டும்போது அதை சாமானிய ரசிகன் ரசித்து பார்க்கிறான். இரண்டு பேர் நிஜத்தில் சண்டையிட்டால், அவர்கள் தங்களது ஜிம் பாடியை காட்ட மாட்டார்கள். ஆனால் சினிமாவில் சட்டையை கிழித்து சிக்ஸ்பேக்கை காட்ட வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!