
தென்னிந்திய திரைவானின் சகலகலாவல்லி “சண்டிராணி” பி பானுமதி நினைவுதினம்
டிச 24, 2022
Advertisement
நடிப்பு, பாட்டு, தயாரிப்பு, இயக்கம், எழுத்து, ஓவியம் என கலையுலகின் சகலமும் அறிந்த “அஷ்டாவதானி” நடிகை பி பானுமதியின் 17வது நினைவு தினம் இன்று. அவரைப்பற்றிய தொகுப்பு இதோ....
* தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் மிகப் பெரிய ஆளுமையான இவர், அண்ணாதுரையால் “நடிப்புக்கு இலக்கணம்” என போற்றப்பட்டவர்.
* தெலுங்கு திரையுலகின் முதல் பெண் “சூப்பர் ஸ்டார்” என்ற அந்தஸ்துக்குரிய இவர், 1925 செப்டம்பர் 07ம் தேதி, ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்திலுள்ள தொட்டாவரம் என்ற சிற்றூரில் பிறந்தார்.
* சிறு வயதிலேயே இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்த பி பானுமதிக்கு, அவரது தந்தை முறையான கர்நாடக சங்கீத பயிற்சியை கற்றுக் கொடுத்தார்.
* 1939ம் ஆண்டு சி புல்லையா இயக்கத்தில் வெளிவந்த “வரவிக்ரயம்” என்ற தெலுங்கு திரைப்படம்தான் பானுமதி கலையுலகில் கால் பதித்த முதல் திரைப்படம்.
* முதல் திரைப்படத்திலேயே தியாகராஜ கீர்த்தனைகளைப் பாடி அனைவரின் கவனங்களை ஈர்த்து புகழடைந்தார் நடிகை பி பானுமதி.
* 1943ம் ஆண்டு “கிருஷ்ண பிரேமா” என்ற திரைப்படத்தில் நடித்தபோது படத்தின் உதவி இயக்குநரான பலுவை ராமகிருஷ்ணாவை காதலித்து மணம் முடித்தார்.
* திருமணத்திற்குப் பின் நடிப்பிலிருந்து விலகியிருந்த நடிகை பி பானுமதியை, மீண்டும் திரையுலகிற்கு “ஸ்வர்க சீமா” என்ற திரைப்படத்தின் மூலம் கொண்டு வந்தது தயாரிப்பாளரும் இயக்குநருமான பி என் ரெட்டி.
* “ஸ்வர்க சீமா” திரைப்படத்தின் வெற்றி அவரை நட்சத்திர அந்தஸ்திற்கு கொண்டு சென்றதோடு, தொடர்ந்து நடிப்புலகில் பயணிக்கும்படியும் செய்தது.
* அன்றைய தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான பி யூ சின்னப்பா, எம் கே தியாகராஜபாகவதர், டி ஆர் மகாலிங்கம் ஆகியோருடனும் இணைந்து நடித்து வந்தார் பி பானுமதி.
* 1947ம் ஆண்டு வெளிவந்த “ரத்னமாலா” என்ற திரைப்படத்தினை முதன் முதலாக பி பானுமதியும் அவரது கணவரும் இணைந்து தயாரித்து வெளியிட்டனர்.
* 1952ம் ஆண்டு தனது மகன் பரணியின் பெயரில் “பரணி ஸ்டூடியோ” என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார் நடிகை பி பானுமதி.
* 1953ஆம் ஆண்டு “சண்டிராணி” என்ற திரைப்படத்தை முதன் முதலாக திரைக்கதை எழுதி, தயாரித்து, இரட்டை வேடங்களில் நடித்ததோடு, படத்தை இயக்கியும் வெற்றி கண்டார் பி பானுமதி.
* டி பி ராஜலக்ஷ்மிக்குப் பின் துணிச்சல் மிக்க பெண் திரைப்பட இயக்குநராக தமிழ் திரையுலகில் பார்க்கப்பட்டவர்தான் நடிகை பி பானுமதி.
* தமிழ் திரையுலகின் மூவேந்தர்களான எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் ஆகியோருடனும் இணைந்து நடித்து பல வெற்றிப் படங்களை தந்திருக்கின்றார் நடிகை பி பானுமதி.
* எம் ஜி ஆருக்கு ஜோடியாக பி பானுமதி இணைந்து நடித்து முதல் திரைப்படம் “மலைக்கள்ளன்”. 1952ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
* எம் ஜி ஆர், பி பானுமதி என்ற இந்த வெற்றிக் கூட்டணி, ஒரே ஆண்டில் “அலிபாபாவும் 40 திருடர்களும்”, “மதுரைவீரன்”, “தாய்க்குப் பின் தாரம்” என மூன்று மாபெரும் வெற்றிப்படங்களை தந்து தமிழ் திரையுலகை திகைக்க வைத்தது.
* சிறந்த பின்னணிப் பாடகியான பி பானுமதிக்கு, வேறு எவரும் பின்னணி பாடியதே இல்லை.
* “ரத்னமாலா”, “லைலா மஜ்னு”, “பிரேமா”, “சண்டிராணி”, “சக்ரபாணி”, “விப்ரநாராயணா”, “பட்டாசாரி”, “இப்படியும் ஒரு பெண்” ஆகிய திரைப்படங்கள் இவரது தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களாகும்.
* “சக்ரபாணி”, “இப்படியும் ஒரு பெண்” ஆகிய திரைப்படங்களுக்கு இவரே இசையமைத்து ஒரு இசையமைப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் பி பானுமதி.
* 1992ம் ஆண்டு இயக்குநர் ஆர் கே செல்வமணியின் இயக்கத்தில் வெளிவந்த “செம்பருத்தி” திரைப்படமே, இவர் தமிழில் நடித்து வெளிவந்த கடைசி திரைப்படம்.
* எம்ஜிஆர் தமிழக முதல்வராக இருந்தபோது, தமிழ்நாடு இசைக் கல்லூரியின் முதல்வர் பொறுப்பினையும் ஏற்று திறம்பட செயல்பட்டு வந்தவர் தான் நடிகை பி பானுமதி.
* தனது இந்த நீண்ட நெடிய திரைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 100க்கும் அதிகமான படங்களில் நடித்த பானுமதி, 2005ம் ஆண்டு டிச., 24ல் தனது 80வது வயதில் மறைந்தார்.
* “பத்மஸ்ரீ”, “பத்மபூஷண்” உட்பட திரையுலகில் இவரது சேவையை பாராட்டும் வண்ணம் பல தேசிய விருதுகளும், மாநில விருதுகளும் இவரது பன்முகத்தன்மை கொண்ட கலைப்பயணத்தை மேலும் அலங்கரித்தன.
* நடிகை, பின்னணிப் பாடகி, தயாரிப்பாளர், திரைக்கதாசிரியர், இயக்குநர், ஓவியர் என ஒரு பெண் ஆளுமையாக கலையுலகில் புரட்சி செய்த இந்த சகலகலாவல்லியை, அவரது நினைவு நாளான இன்று நாம் நினைவு கூர்வதில் பெருமை கொள்வோம்.
* தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் மிகப் பெரிய ஆளுமையான இவர், அண்ணாதுரையால் “நடிப்புக்கு இலக்கணம்” என போற்றப்பட்டவர்.
* தெலுங்கு திரையுலகின் முதல் பெண் “சூப்பர் ஸ்டார்” என்ற அந்தஸ்துக்குரிய இவர், 1925 செப்டம்பர் 07ம் தேதி, ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்திலுள்ள தொட்டாவரம் என்ற சிற்றூரில் பிறந்தார்.
* சிறு வயதிலேயே இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்த பி பானுமதிக்கு, அவரது தந்தை முறையான கர்நாடக சங்கீத பயிற்சியை கற்றுக் கொடுத்தார்.
* 1939ம் ஆண்டு சி புல்லையா இயக்கத்தில் வெளிவந்த “வரவிக்ரயம்” என்ற தெலுங்கு திரைப்படம்தான் பானுமதி கலையுலகில் கால் பதித்த முதல் திரைப்படம்.
* முதல் திரைப்படத்திலேயே தியாகராஜ கீர்த்தனைகளைப் பாடி அனைவரின் கவனங்களை ஈர்த்து புகழடைந்தார் நடிகை பி பானுமதி.
* 1943ம் ஆண்டு “கிருஷ்ண பிரேமா” என்ற திரைப்படத்தில் நடித்தபோது படத்தின் உதவி இயக்குநரான பலுவை ராமகிருஷ்ணாவை காதலித்து மணம் முடித்தார்.
* திருமணத்திற்குப் பின் நடிப்பிலிருந்து விலகியிருந்த நடிகை பி பானுமதியை, மீண்டும் திரையுலகிற்கு “ஸ்வர்க சீமா” என்ற திரைப்படத்தின் மூலம் கொண்டு வந்தது தயாரிப்பாளரும் இயக்குநருமான பி என் ரெட்டி.
* “ஸ்வர்க சீமா” திரைப்படத்தின் வெற்றி அவரை நட்சத்திர அந்தஸ்திற்கு கொண்டு சென்றதோடு, தொடர்ந்து நடிப்புலகில் பயணிக்கும்படியும் செய்தது.
* அன்றைய தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான பி யூ சின்னப்பா, எம் கே தியாகராஜபாகவதர், டி ஆர் மகாலிங்கம் ஆகியோருடனும் இணைந்து நடித்து வந்தார் பி பானுமதி.
* 1947ம் ஆண்டு வெளிவந்த “ரத்னமாலா” என்ற திரைப்படத்தினை முதன் முதலாக பி பானுமதியும் அவரது கணவரும் இணைந்து தயாரித்து வெளியிட்டனர்.
* 1952ம் ஆண்டு தனது மகன் பரணியின் பெயரில் “பரணி ஸ்டூடியோ” என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார் நடிகை பி பானுமதி.
* 1953ஆம் ஆண்டு “சண்டிராணி” என்ற திரைப்படத்தை முதன் முதலாக திரைக்கதை எழுதி, தயாரித்து, இரட்டை வேடங்களில் நடித்ததோடு, படத்தை இயக்கியும் வெற்றி கண்டார் பி பானுமதி.
* டி பி ராஜலக்ஷ்மிக்குப் பின் துணிச்சல் மிக்க பெண் திரைப்பட இயக்குநராக தமிழ் திரையுலகில் பார்க்கப்பட்டவர்தான் நடிகை பி பானுமதி.
* தமிழ் திரையுலகின் மூவேந்தர்களான எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் ஆகியோருடனும் இணைந்து நடித்து பல வெற்றிப் படங்களை தந்திருக்கின்றார் நடிகை பி பானுமதி.
* எம் ஜி ஆருக்கு ஜோடியாக பி பானுமதி இணைந்து நடித்து முதல் திரைப்படம் “மலைக்கள்ளன்”. 1952ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
* எம் ஜி ஆர், பி பானுமதி என்ற இந்த வெற்றிக் கூட்டணி, ஒரே ஆண்டில் “அலிபாபாவும் 40 திருடர்களும்”, “மதுரைவீரன்”, “தாய்க்குப் பின் தாரம்” என மூன்று மாபெரும் வெற்றிப்படங்களை தந்து தமிழ் திரையுலகை திகைக்க வைத்தது.
* சிறந்த பின்னணிப் பாடகியான பி பானுமதிக்கு, வேறு எவரும் பின்னணி பாடியதே இல்லை.
* “ரத்னமாலா”, “லைலா மஜ்னு”, “பிரேமா”, “சண்டிராணி”, “சக்ரபாணி”, “விப்ரநாராயணா”, “பட்டாசாரி”, “இப்படியும் ஒரு பெண்” ஆகிய திரைப்படங்கள் இவரது தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களாகும்.
* “சக்ரபாணி”, “இப்படியும் ஒரு பெண்” ஆகிய திரைப்படங்களுக்கு இவரே இசையமைத்து ஒரு இசையமைப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் பி பானுமதி.
* 1992ம் ஆண்டு இயக்குநர் ஆர் கே செல்வமணியின் இயக்கத்தில் வெளிவந்த “செம்பருத்தி” திரைப்படமே, இவர் தமிழில் நடித்து வெளிவந்த கடைசி திரைப்படம்.
* எம்ஜிஆர் தமிழக முதல்வராக இருந்தபோது, தமிழ்நாடு இசைக் கல்லூரியின் முதல்வர் பொறுப்பினையும் ஏற்று திறம்பட செயல்பட்டு வந்தவர் தான் நடிகை பி பானுமதி.
* தனது இந்த நீண்ட நெடிய திரைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 100க்கும் அதிகமான படங்களில் நடித்த பானுமதி, 2005ம் ஆண்டு டிச., 24ல் தனது 80வது வயதில் மறைந்தார்.
* “பத்மஸ்ரீ”, “பத்மபூஷண்” உட்பட திரையுலகில் இவரது சேவையை பாராட்டும் வண்ணம் பல தேசிய விருதுகளும், மாநில விருதுகளும் இவரது பன்முகத்தன்மை கொண்ட கலைப்பயணத்தை மேலும் அலங்கரித்தன.
* நடிகை, பின்னணிப் பாடகி, தயாரிப்பாளர், திரைக்கதாசிரியர், இயக்குநர், ஓவியர் என ஒரு பெண் ஆளுமையாக கலையுலகில் புரட்சி செய்த இந்த சகலகலாவல்லியை, அவரது நினைவு நாளான இன்று நாம் நினைவு கூர்வதில் பெருமை கொள்வோம்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!