
ஒடிடியிலும் நரகாசூரனை விடாமல் துரத்தும் சிக்கல்
ஆக 01, 2021
துருவங்கள் பதினாறு படம் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறிய கார்த்திக் நரேன் இயக்கிய இரண்டாவது படம் தான் நரகாசூரன்.. அரவிந்த்சாமி, சந்தீப், இந்திரஜித் என முக்கிய ஹீரோக்கள் இதில் நடித்துள்ள இந்தப்படம் கடந்த நான்கு வருடங்களாக ரிலீஸாக முடியாமல் தவித்து வருகிறது. இந்தப்படத்தை இணைந்து தயாரித்த இயக்குனர் கவுதம் மேனன் ஏற்கனவே கடன் பிரச்சனையில் சிக்கியிருந்ததால் அதன் காரணமாக இந்தப்படத்தை வெளியிட முடியாமல் சிக்கல் நீடித்தது.
இந்தநிலையில் ஒடிடி தளத்தில் இந்தப்படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஒருவழியாக ஆகஸ்ட்-13ல் இந்தப்படம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் இப்போதும் கூட பைனான்சியர்களிடம் இருந்து இந்தப்படத்திற்கான செட்டில்மென்ட்டை முடித்து தடையில்லா சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிப்பதாகவும் அதனால் ஆக-13ல் நரகாசூரன் வெளியாவது சந்தேகம் தான் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் ஒடிடி தளத்தில் இந்தப்படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஒருவழியாக ஆகஸ்ட்-13ல் இந்தப்படம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் இப்போதும் கூட பைனான்சியர்களிடம் இருந்து இந்தப்படத்திற்கான செட்டில்மென்ட்டை முடித்து தடையில்லா சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிப்பதாகவும் அதனால் ஆக-13ல் நரகாசூரன் வெளியாவது சந்தேகம் தான் என்றும் சொல்லப்படுகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!