
மாமனிதன் அடுத்த வாரம் சென்சார்
நவ 15, 2021
சீனு ராமசாமி இயக்கத்தில், இளையராஜா - யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் "மாமனிதன்". இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டரை வருடங்களுக்கு முன்பாக 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிந்துவிட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிக் கொண்டே போனது.
இப்படம் பற்றிய வெளியீட்டு அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவும் அறிவிக்கவில்லை. ஆனாலும், படத்தின் இரண்டு பாடல்களை இதுவரை வெளியிட்டுள்ளார்கள். அந்தப் பாடல்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் படம் பற்றிய அப்டேட் ஒன்றை படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி நேற்று வெளியிட்டுள்ளார். டுவிட்டரில், “37 நாள் படப்பிடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படம். எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத் அவர்களும் நானும் படத்தை எடிட்டிங் செய்து இனிதே மற்றப் பணிகளும் நிறைவடைந்து திரை தொடக் காத்திருக்கிறது. அடுத்த வாரம் சென்சார் போகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தாலும் சீனுராமசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் படல் நடித்த "இடம் பொருள் ஏவல்" படம் முடிந்வடைந்து ஆறு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் வெளிவராமலே உள்ளது. ஓடிடியிலாவது இப்படம் வெளிவருமா என விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், படத்தைத் தயாரித்த இயக்குனர் லிங்குசாமி இப்படம் பற்றி இதுவரையிலும் எதுவுமே சொன்னதில்லை.
இப்படம் பற்றிய வெளியீட்டு அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவும் அறிவிக்கவில்லை. ஆனாலும், படத்தின் இரண்டு பாடல்களை இதுவரை வெளியிட்டுள்ளார்கள். அந்தப் பாடல்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் படம் பற்றிய அப்டேட் ஒன்றை படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி நேற்று வெளியிட்டுள்ளார். டுவிட்டரில், “37 நாள் படப்பிடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படம். எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத் அவர்களும் நானும் படத்தை எடிட்டிங் செய்து இனிதே மற்றப் பணிகளும் நிறைவடைந்து திரை தொடக் காத்திருக்கிறது. அடுத்த வாரம் சென்சார் போகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தாலும் சீனுராமசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் படல் நடித்த "இடம் பொருள் ஏவல்" படம் முடிந்வடைந்து ஆறு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் வெளிவராமலே உள்ளது. ஓடிடியிலாவது இப்படம் வெளிவருமா என விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், படத்தைத் தயாரித்த இயக்குனர் லிங்குசாமி இப்படம் பற்றி இதுவரையிலும் எதுவுமே சொன்னதில்லை.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!