
கொலை முடிந்தது
ஜன 24, 2022
Advertisement
கோடியில் ஒருவன் படத்துக்குப் பிறகு தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இதற்கு இடையில் கொலை என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார்.
பாலாஜி குமார் இயக்கி வரும் இப்படத்தை இன்பினிட்டி பிலிம் பிக்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ், டேபிள் ப்ராபிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், மீனாட்சி சவுத்ரி, அர்ஜுன் சிதம்பரம், முரளி சர்மா உள்ளிட்ட பலர்நடித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கும் இப்படத்துக்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. தற்போது டப்பிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் தொடங்கி உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரு கூட்டு குடும்பத்திற்குள் ஒரு கொலை நடக்கிறது. அதை செய்தது யார்? எதற்காக? அது எப்படி கண்டுபிடிக்கப்படுகிறது என்பதுதான் படத்தின் கதை என்கிறார்கள்.
பாலாஜி குமார் இயக்கி வரும் இப்படத்தை இன்பினிட்டி பிலிம் பிக்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ், டேபிள் ப்ராபிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், மீனாட்சி சவுத்ரி, அர்ஜுன் சிதம்பரம், முரளி சர்மா உள்ளிட்ட பலர்நடித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கும் இப்படத்துக்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. தற்போது டப்பிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் தொடங்கி உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரு கூட்டு குடும்பத்திற்குள் ஒரு கொலை நடக்கிறது. அதை செய்தது யார்? எதற்காக? அது எப்படி கண்டுபிடிக்கப்படுகிறது என்பதுதான் படத்தின் கதை என்கிறார்கள்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!